பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

ஞாயிறும் திங்களும்


தீண்டாமை ஒழிப்புப்போர் நடத்திக் காட்டித் தீமைகளை முறியடித்த வைக்கம் வீரர் வேண்டாத பெண்ணடிமை தொலைப்ப தற்கும் வீழ்ந்துவிட்ட தமிழினத்தின் விடுத லைக்கும் ஈண்டையா போர்நடத்தி வெற்றி கண்டார் ஈங்கின்றிப் பிறநாட்டிற் பிறந்தி ருந்தால் ஆண்டுள்ளோர் ஆபிரகாம் லிங்கன் என்பார் அறிவுரைத்த சாக்கரடி சென்று ரைப்பார். யாராண்டால் நமக்கென்ன என்றி ருந்த எமக்கெல்லாம் உணர்வூட்டி அறிவும் ஊட்டிப் பாராண்ட தமிழினமே விழித்து நோக்கு! பகுத்தறிவால் ஆய்ந்துணர்வாய்! என்ற தந்தை நூறாண்டுப் பணிவியந்து விழாவெ டுத்தோம் நோக்கிஎதிர் வீட்டிலுள்ள ஒருவன் நம்மை யாராரோ போட்டிவிழா எடுத்தா ரென்றே ஏளனங்கள் செய்கின்றான், பேதை மாந்தன்! வெம்மைமிகும் பாலையைப்போல் தலைவ ருண்டு விளைவறியா நெய்தலைப்போல் தலைவ ருண்டு செம்மறிமேய் முல்லையைப்போல் தலைவ ருண்டு சேர்விலங்கு குறிஞ்சியைப்போல் தலைவ ருண்டு *கொம்மையுறும் உழுபடையால் பிளந்த போதும் கொடுமைகண்டு கலங்காமல் பயனே நல்கும் நன்மருத நிலம்போல உணர்வு தந்து நமைஎல்லாம் காக்கின்ற தலைவர் அய்யா. நாதியற்றுக் கிடந்துழன்ற தமிழி னத்தை நானிலத்தில் தலைநிமிரச் செய்த கோவே! தீதகற்றும் சொன்மலர்கள் தேர்ந்தெ டுத்துச் செந்தமிழிற் பாமாலை தொடுத்து வந்து காதலுற்று நின்னடிக்குச் சூட்டு கின்றோம் கைதொழுது வாழ்த்துகின்றோம் எமது நெஞ்சில் கோதகற்றும் பகுத்தறிவை இன்னும் ஏற்று கொடுமைகளை எதிர்க்கின்ற துணிவும் ஊட்டு

  • கொம்மை - திரட்சி