பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் 4?

டாக்டர் முத்துலட்சுமிக்கும் மருத்துவக் கல்வியில் ஊக்க மும், உற்சாகமும் அபரிமிதமாக வளர்ந்தது.

டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரின் மகத்துவத் துறை அறிவாற்றலையும், ஊக்கத்தையும் உற்சாகத்தை யும் கண்ட இந்திய அரசு, குழந்தைகள் மகளிர் நோய்களுக் கான ஆராய்ச்சிக் கல்விக்கை, அம்மையாரை லண்டன் மாநகருக்கு அனுப்பி வைக்க எண்ணியது.

சென்னை மாகாண அன்றைய முதல்வராக இருந்த நீதிக்கட்சியைச் சேர்ந்த முதல்வர் பன ராஜா, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி லண்டன் போவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்.

முத்துலட்சுமி அம்மையார் பனகல் அரசின் குடும்ப உாக்டர். அதனால் அம்மையாரது அறிவாற்றலை முதல்வர் ந்ன்றாகத் தெரிந்து வைத்திருந்தார். அதனால், அவர் அந்த அம்மையாருக்குப் பரிந்துரைத்தார்.

டிாக்டர் முத்துலட்சுமி அம்மைாருக்கு மக்கள். இடையே வளர்ந்துவரும் மதிப்பும், மரியாதையும். செல் வாக்கும் கண்டு, இந்த நேரத்தில் மேல் நாடு சென்றால், அவையெலாம் குன்றிவிடுமோ என்ற அச்சம் அம்மை

யாருக்கு இருந்தது. அதனால் லண்டன் போகத் தயங்கினார்.

ஆனால், மருத்துவத்துறைநுணுக்கங்கனை.நுட்பமாகப் புரிந்துகொள்ள இந்த பயணம் பயன்படும், தயங்காதீர்கள் என்று அம்மையாருக்கு நெருக்கமானவர்கள் அன்புரை கூறினார்கள்.

அதே நேரத்தில் டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரின் கணவரும் மேல்நாடு சென்று. மேலும் கருத்துவத்துறை அனுபவங்கள் பெறவேண்டும் என்று விரும்பினார். சென்னை மருத்துவத்துறை அவருக்கு ஓராண்டு ஊதியத் தோடு விடுமுறையும் இந்து உதவியது. அதனால், கணவு