பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
'டானா' முத்து/33

எண்ணமில் லாமல் காப்பாற்றி விட்டான்
கண்ணியம் இழந்த முத்துவும் மாமா
புண்ணியத் தாலே புதிய வனாய் உழைக்க
திண்ணம் கொண்டான்! உறுதியும் சேர்ந்தது!

'நல்ல குடும்பம் பல்கலைக் கழகம்'
அல்லவா? அதனால் ஆசிரியர் வீடே
எல்லா வகையிலும் உழைப்பால் உயர்ந்து
சொல்லரும் புகழுடன் துலங்குதல் கண்டான்!

தணிகா சலத்தின் குடும்பத் தாருடன்
பிணைத்துக் கொண்டு 'வாழ்க்கை' என்னும்
இணையிலாக் கல்வியை முத்து பெற்றான்!
பணத்திலும் பெரிதாய்ப் பண்பைக் கண்டான்!

அத்தை பார்வதி வாங்கிய நிலத்தில்
பத்தில் இரண்டு பங்கும் இல்லா
மெத்தவும் சிறிய இடத்தில் மாமா
வித்தையாய்க் காய்கனி விளைத்தல் கண்டான்!