பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
டானா முத்து /53

"கூட கோபுர மாடங்கள்
கொண்ட மாளிகை ஒன்றினிலே
ஆடல், பாடல் மிகுந்திடவே,
அழகாய் என்றன் குழந்தைகளும்


"தங்கத் தட்டில் சோறுபழம்;
தவளக் கிண்ணியில் பால்தேனை,
பொங்கும் மகிழ்வுடன் தாயூட்டப்
புசிக்கும் அற்புதக் காட்சிகளை


"என்றன் இரண்டு கண்களாலே
என்றும் கண்டு களித்திடவே,
ஒன்றே ஒன்றாய் ஒருவரம் தான்
உவந்தே அளிப்பீர்” எனக் கேட்டான்


சாதுவாய் வந்த கடவுள்தான்
"தந்தேன்! தந்தேன்! அவ்வாறே!
தோதாய் வரமும் கேட்டிட்டாய்!
சூட்சம புத்தியால் வென்றிட்டாய்!