இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
58 /வயலூர் சண்முகம்
நாதனும் போட்டியாய்த் தன்குழலில்
நாளும் ஊதிப் பார்த்திட்டான்!
கோதை மாமியும் தன்மகனைக்
கொஞ்சி ரொம்பவும்மெச்சிட்டாள்!
வேலு ஊதும் பாட்டைத்தான்
விரும்பி யாவரும் கேட்டிட்டார்!
நாலு ஐந்து பேர்கூட
நாதன் பாட்டை விரும்பவில்லை!
கோதை இதனால் மேன்மேலும்
கொடுமைப் படுத்தினாள் வேலுவையே
“சோதாப் பயலே! போடா!”வெனச்
சோறு போடவும் மறுத்திடுவாள்!
நங்கை மட்டும் வேலுவையே
நல்ல அன்புடன் நேசித்தாள்!
பொங்கல் சோறு;மிட்டாய்கள்
பதுக்கி வைத்தே கொடுத்திடுவாள்!"
****