இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
'டானா முத்து' / 73
“வேலு வேலுனு ஒருத்தங்க!-
வேப்ப மரத்து வீட்டிலேதான்
நாலு வருசமாய் இருக்காங்க
நல்ல பையன் தானுங்க!...”
“அவனுக் கென்ன இப்போது?
அதைச் சொல் லுங்க நேரடியாய்!”
கவனமின்றிக் கேட்ட அதிகாரி
காரை நெருங்கினார் சிகரெட்டுடன்!
“வேலுப் பயலுக்கு வியாதிங்க
வெறச்சி முறைச்சி விழுந்திடுவான்!
காலும் கையும் லொட லொடக்கும்!
'காக்கா வலிப்பு’ என்கிறாங்க!
பாவம் அவனை இப்போது
பூதம் அடிச்சிப் போட்டிடுச்சி!
சாவப் போறான்! கங்காணி
சாமியார் லேசுப் பட்டவரா?"