பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/137

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

135



“மறந்து போய்விடப் போகிறார்கள்.”

“அவர்கள் மறந்தாலும் நீங்கள் மறக்கமாட்டீர்களே!”

நாயுடுவுக்குக் குழப்பம் அதிகமாக இருந்தது. என் மனநிலையை இவள் புரிந்துகொண்டு விட்டாளோ? புரிந்துகொண்டுதான் எனக்குத் திருப்தியாகவும் பேசுகிறாளோ? அப்படியானால் நான் இவளுக்குப் பணம் கொடுப்பதற்காகத்தான் கவிதைப் பந்தயம் போட்டேன் என்று இவள் தெரிந்த கொண்டிருப்பாளோ? என் தோல்வியால் நான் பணம் கொடுக்கும் முயற்சியில் வெற்றி பெறவில்லையே! என்று செக்குமாடுகள் போல அவர் யோசனைகள் எல்லாம் தேவகியையே சுழன்று சுழன்று வந்தன.

“போம்மா! போ! சமையற்காரனைப் சாப்பாடு போடச் சொல்லு. எனக்கும் அவர்களுக்கும் ஒத்துவராது.”

“நீங்கள் என்னிடம் பிரியமாக இருக்கிறீர்கள்.”

பிரியம்! பெருமூச்சுவிட்டார் நாயுடு. இந்தப் பிரியம் அவர் வாழ்க்கையில் கணம் கனமாகத் திரட்டி உருவாக்கியிருக்கும் நொடியில் அழித்துவிடக் கூடிய கனலாக இருக்குமோ?