பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/192

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

சோலை சுந்தரபெருமாள்



“அலங்காரம்!... வாம்மா வா... ஏன் தயங்கிறே...நீயும் இவனுக்கு ஒரு அம்மாதான்..” என்று கூறி அவளைத் தழுவிக் கொண்டு கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள்.

சலங்கை ஒலியோடு வாசலில் வில்வண்டி வந்து நின்றது. முத்துத்தாண்டவன் வண்டியைவிட்டு இறங்கினான். தன்னை வரவேற்க வடிவும், அலங்காரமும் சேர்ந்து நிற்பதைக கண்டான்.

அவன் மனம் தளிர்த்தது.