பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/219

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

217


“அடிசக்க. நம்ப, தோட்டமென்னுதான் கத்தரிச் செடியா பார்த்துக் கொண்டாந்து விடுறீயா?”

“இல்ல மாமா... அதெல்லாம் இல்லிங்க மாமா”

“ஆட்டயெல்லாம் விட்டுட்டு எங்க போற”

“அடுத்தவாரம் பரிட்சைங்க மாமா. செத்த படுச்சிக்கிட்டு இருந்தேன்...”

“இந்த ஆட்டுக்குட்டி புடிச்சிக் கட்ட என்ன பாடுபட்டேன் தெரியுமா?” அவர் பச்சை பெல்ட்டை மேலே ஏற்றிவிட்டுக் கொண்டார்.

அவன் பதிலொன்றும் சொல்லாம் ஆட்டுக்குட்டியையே பார்த்தபடி இருந்தான். ஆட்டுக்குட்டி கயிற்றை இழுத்துக்கொண்டு ஒருமுறை கத்தியது.

முனியாண்டித்தேவர் சுருட்டை அணைத்துக் கீழே போட்டுவிட்டு, “இந்த ஒருவாட்டிதான்... இன்னம இஞ்ச வராம பாத்துக்க... இன்னம இஞ்ச வந்துச்சி நேரா பட்டிக்குத்தான்...” என்றார். -

அவன் தலையசைத்து தண்ணீர் ஓடும் வாய்க்காலைத் தாண்டி ஒதியமரத்துப் பக்கம் ஒடினான். ஆட்டுக்குட்டி இவனைப் பார்த்ததும் கொடியை இழுத்துக்கொண்டு இரண்டுமுறை கத்தியது. அவன் ஆட்டுக்குட்டியைக் கட்டி இருந்த ஓணான் கொடியை அறுத்துவிட்டான். ஆட்டுக்குட்டி துள்ளிப் பாய்ந்து கத்தரித்தோடிடத்திற்குள் ஓடியது.

“பாத்துப்பாத்து... கத்தரியெல்லாம் கடிக்காம புடிச்சிக்கிட்டு போ” என்றார் முனியாண்டித்தேவர்.

அவன் அவசர அவசரமாகக் கத்திரி செடிகளுக்குள் புகுந்து ஆட்டுக்குட்டியை ஓட்டிக்கொண்டு வெளியில் வந்தான்.

“அம்மாவை நான் கேட்டென்னு சொல்லு”

“சரிங்க மாமா அவன் ஆட்டுக்குட்டியை ஓட்டிக்கொண்டு சின்ன்பண்ணை கத்திரி தோட்டத்தை விட்டு வெளியில் வந்தான்.

ஆறுமுகசாமி ஏழாவது படிக்கும்போது அவன் அப்பா செத்துப் போய்விட்டார். செத்துப் போனார் என்றால் திடீரென்றுதான் நடந்தது. சென்னைக்கு அறிவாலயம் திறப்புக்குச் சென்ற காத்தமுத்து குழுவுக்கு வேன் ஓட்டிக்கொண்டு சென்றார். திறப்புவிழா முடிந்ததும் சாலைமறிப்புப் போராட்டம் இருக்கிறது என்ற படியால் அவசர அவசரமாகத் திரும்பினார்கள். ஆனால் செங்கல்பட்டுப் பக்கத்தில் ஒரு டயர் பஞ்சாராகிவிட்டது. பஞ்சர் போட்டு டயர் மாற்றிக்கொண்டு திண்டிவனம் வரும்போது பொழுது புல புல வென்று புலர்ந்து கொண்டிருந்தது.

சாலையில் நூறு நூற்றியம்பதுக்கு மேலாக ஆட்கள் கையில் அரிவாள், தடிகளை வைத்துக்கொண்டு போக்குவரத்தை