பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/227

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

225


போயிடபோற” என்றான்.

“எப்பவும் உங்க ஆளுதான் சார்”

“சார் வழியில ஒன்னும் பிரச்சினை வராதே” என்றான் கிளீனர் சுப்பு

‘அடி செருப்பால’ என்று காலைத் தூக்கிக் கொண்டு அவனை உதைக்கப் போனான். கிளினர் லாரிக்கு முன்னே ஓடி மறைந்து கொண்டான்.

"அவன விடுங்க சார். எதிலையும் சந்தேகம் பிடிச்ச பய சார்"

“அவன ஒரு நாளைக்கு நல்லா கொடுக்கப்போறேன். நீ பார்த்துக்கிட்டே இரு”

“நான் சார்-”

“நீ கிளம்பு”

“சரி சார்”

“வழியில் ஏதாவது பிராபளமென்னா என் பெயர சொல்லு”

“அது போதும் சார் வண்டி நேரா மெட்ராஸ்தான் சார்” என்று சக்ரபாணி லாரியில் போய் உட்கார்ந்தான். லாரி கிளம்பி மெதுவாக உருண்டது. நாவல் மரத்துக்குப் பின்னால் மறைந்து நின்று கொண்டிருந்த கிளீனர் சுப்பு ஓடி வந்து லாரியில் ஏறிக் கொண்டான். லாரி புழுதியைக் கிளப்பிக்கொண்டு பனைமரங்கள் நிறைந்த சாலையில் ஓட ஆரம்பித்தது.

சப்-இன்ஸ்பெக்டர் லாரியையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தான். லாரி பார்வையில் இருந்து மறைந்ததும், மோட்டார் சைக்கிளில் ஏறி எதிர்ப் பக்கமாகச் சென்றான்.

ஆறுமுகசாமிக்குத் தாகம் எடுப்பது மாதிரி இருந்தது. படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி பையில் வைத்துக்கொண்டு முந்திரி மரத்தடியில் இருந்து வெளியில் வந்தான். சூரியன் கீழே இறங்க எங்கும் நிழல் பரவி இருந்தது. ஆற்றுப்பக்கம் ஓடி இரண்டு கையாலும் தண்ணீரை அள்ளி குடித்துவிட்டு கையைத் துடைத்தபடி ஐயனார் கோயில் பக்கம் சென்றான். வெள்ளாடும் ஐந்தாறு குட்டிகளும் மேய்ந்துகொண்டு இருந்தன. ஐயனார் கோயில் குதிரைகள் பக்கம் ஓடினான். கருப்பு ஆட்டையும் அதனோடு இருக்கும் ஏழெட்டு ஆடுகளையும் காணோம். அவன் அவசர அவசரமாகக் கோயில் பின்னால் ஓடி மேட்டில் ஏறி நின்று, “ம்மா என்று கத்தினான்.

அவன் கத்தினால் முதலில் கருப்பு ஆடுதான் பதில் கொடுக்கும். ஆனால் பதில் இல்லை. ஈச்சமரங்கள் பக்கமாக ஓடிப் பார்த்தான். கருப்பு ஆட்டைக் காணோம்.

அவன் மேட்டில் இருந்து கீழே இறங்கி சின்னப் பண்ணை

கத்தரித் தோட்டத்தை நோக்கி ஓடினான். கத்தரி செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிவிட்டு, சுருட்டை இழுத்துக்கொண்டு