பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தஞ்சைச் சிறுகதைகள்

341


குடிச்சிட்டு பேசிக்கிட்டு இருந்தாரு. அப்பறம் எங்கிட்டே இருந்த காசெ எடுத்து இன்னுங்... கொஞ்சம் வாங்கி, நாங் குடிக்கலெ... எம்மச்சானுக்கே குடுத்து குடிக்கச் சொன்னேன். கள்ளுக்கடைக்காரரு...”

செவந்தான் மீசைக்கார்ருக்கிட்டேயிருக்கிற கொவளையெ எடுறான்னாரு. நான் போயி எடுத்தேன். ஒடனே இவரு "செவந்தான் ஒஞ் சம்மந்தி பசையான ஆளாமுல்லடா, எனக்கு கள்ளு வாங்கித் தரச் சொல்லுன்னாரு..." நாஞ் சொன்னேன், அந்தாளுக்கு இது பழக்கமில்லே கள்ளவீடு. மல்லுக்கட்டி அழைச்சாந்தேன்னேன். "சரிடா... வாங்கச் சொல்லுடா”ன்னாரு... நல்லா மாட்டிக்கிட்டோம். எப்படியும் கலட்டிக்கிட்டு போயிடனுமுன்னு நெனச்சிக்கிட்டு...."எம் மச்சானெ நீ மொல்லப் போயென்னு சொன்னேன். அவரு ஒரு பத்தடி நடந்திருப்பாரு இவரு என்ன பண்ணுனாரு. உக்காந்து இருந்தவரு எந்திருச்சி டேய் இந்த ஊரான் அடேய் செவந்தான் சம்மந்தி- என்னடா... ஒரு கள்ளன் கேக்கிறேன் மரியாதெ இல்லாமப் போறேன்னுட்டு வேகமாய் போனாரு. போன வாக்கிலே இடுப்புலே ஒரு ஒதை விட்டாருய்யா. எனக்கு குடிச்ச கள்ளெல்லாம் எங்கே போச்சினே தெரியலே... ஒப்புரானே... சம்மந்தியெ ஓதைச்சிப்புட்டாரேன்னு- என்ன கள்ளவீடு-- நீங்க குடிக்காத கள்ளா. இதுக்குப் போயி - விருந்தாடி வந்த மனுசனெ ஒதைக்கிறியன்னு கேட்டேம்பாரு அட தாயலி இந்த மீசைக்காரன்கிட்டேயே எதுத்துப் பேசிறியாடான்னு இழுத்து அறைஞ்சார்டா. காது கூவுது... நல்லதுக்கு காலமில்லேன்னு. நெனச்சிக்கிட்டு... சரி...வா... மச்சான் தப்பா நெனக்காதேன்னு சொல்லி கூப்புட்டேன். அங்கென ஆளுக நெறையா நிக்கி- அடுத்த ஊருக்காரனுக்கு கொடுக்கிற மரியாதையா இது. எங்க ஊரா இருக்கணும்ன்னு சொல்லிவிட்டு திரும்புனாரு. எஞ்சம்மந்தி என்னடா, டெ. மனனேன்னு மறுபடியும் எட்டி ஒதைச்சிப்புட்டாருய்யா எம் மச்சான் எதுக்க ஆரம்பிக்க ஒடனேல்லா எல்லாரும் வந்து என்னெக்கிட்டே ஒம் மச்சானெக் கூட்டிகிட்டுப் போடான்னு சொல்றாக, அன்னையிலிருந்து இந்தாளு மேலே கொஞ்சங்கூட எனக்கு- சொல்லி முடிப்பதற்குள் ரெங்கசாமி சாராயத்தைக் கொண்டு வந்து விட்டான். பழைய கசப்பான அவமானகரமான நினைவுகளை அசைபோட்ட செவந்தான். வாங்கி வந்த அவ்வளவு சாராயத்தையும் எடுத்து. ஒரே மூச்சாகக் குடித்தார்.. விருட்டென. போதை ஏறியது.

சுற்றிலும் நன்கு பற்றி எரிந்த விறகு கட்டைகள் பொதபொதவெனச் சரிந்தன. கட்டைகளுடன் சேர்ந்து பாதி வெந்த நிலையிலிருந்த மீசைக்காரரும் சரிந்து விழுந்தார்.