பக்கம்:தந்தையும் மகளும்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

107

அந்தத் தகட்டோடு ஒரு சிறு மெல்லிய கம்பி இணைக்கப்பட்டு, வெளியே பேனாவினுடன் சேர்ந்து ஒட்டிக்கொண்டிருக்கும். மை அடைக்க வேண்டுமானால் இந்தக் கம்பியை நிமிர்த்தவேண்டும். அப்பொழுது அது அத்துடன் பொருந்தியுள்ள தகட்டையும் அதை அடுத்துள்ள ரப்பர் குழாயை யும் அமுக்கும். அதனால் ரப்பர் சுருங்கும்; காற்று வெளியே செல்லும். பேனாவை மையினுள் வைத்துக்கொண்டு மெல்லிய கம்பியை எப்பொழுதும் போல் இருக்குமாறு செய்துவிட்டால் ரப்பர் குழாய் முன்போல் அகன்று விடும். வெளியே உள்ள காற்று மையைக் குழாய்க்குள் ஏறும்படி செய்யும்.

105 அப்பா! டாக்டர் வந்தால் ஏதோ ஒன்றை நெஞ்சில் வைத்துப் பார்க்கிறாரே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! அதை நெஞ்சில் மட்டும் வைத்துப் பார்ப்பதில்லை.வயிற்றில் கூட வைத்துப் பார்ப்பதுண்டு. நம்முடைய உடம்பிலுள்ள இருதயம், சுவாசப் பைகள், குடல் போன்ற உறுப்புகளில் ஏதேனும் நோயுண்டாயிருக்கிறதா என்று அறியவே டாக்டர் அதை உபயோகிக்கிறார். அந்த உறுப்புக்கள் வேலை செய்யும் பொழுது உண்டாகும் ஒலிகள் ஒழுங்கான முறையில் கேட்குமானால் நோயில்லை என்றும் ஒழுங்கற்ற முறையில் கேட்குமானால் நோயுண்டு என்றும் தெரிந்து கொள்ளலாம். ஆனால் அந்த ஒலிகளைக் காது வைத்துக் கேட்டால் நன்றாகப் புலப்படா. அதற்காக அமைக்கப் பட்டதே அவர் உபயோகிக்கும் "ஸ்டெதாஸ் கோப்" என்று ஆங்கிலத்தில் கூறும் உடல் ஒலிச் சோதினியாகும்.

அந்தக் கருவியில் மணிபோல் ஒன்றிருக்கும். டாக்டர் அதை நோயாளி உடம்பில் பரிசோதிக்க வேண்டிய இடத்தில் வைத்துக்கொண்டு இரு கவராக உள்ளவற்றின் முனைகளைத் தமது இரண்டு காதுகளிலும் வைத்துக் கொண்டு