பக்கம்:தந்தையும் மகளும்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

தந்தையும்


118அப்பா! பாத்திரங்கள் பழுதாய்ப் போனால் ஈயப்பற்று வைப்பதாகச் சொல்லுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! பித்தளைப் பாத்திரம் ஓட்டையாய் விட்டால் அந்த ஓட்டையளவாக ஒரு பித்தளைத் துண்டை அதில் வைத்து ஒட்டவைத்து விட்டால் ஒட்டையை அடைத்து விடலாம் அல்லவா? ஆனால் பித்தளைத் துண்டை அதில் ஒட்டவைப்பது எப்படி?ஒட்டவைக்காவிட்டால் கீழே விழுந்து விடுமல்லவா?

அதற்காகச் செம்பும் நாகமும் சேர்ந்த உலோகக் கலவையை உபயோகிக்கிறார்கள். இது இளகி பித்தளைத் துண்டையும் சட்டியையும் சேர்த்து விடும். இவ்வாறு பலவித உலோகக் கலவைகளைப் பயன் படுத்துகிறார்கள். நகைகள் செய்வோர் வெள்ளியும் செம்பும் சேர்ந்த கலவையையும் தகர வேலை செய்வோர் காரீயம் வெள்ளீயம் சேர்ந்த கலவையையும் உபயோகிப்பார்கள்.

119அப்பா! கதவுக்கு சாயம் பூசும் பொழுது அதில் எண்ணெய் சேர்த்தாலும் கட்டியாக உலர்ந்து விடுகிறதே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! கதவுக்குப் பூசும் சாயத்தை எப்படி உண்டாக்குகிறார்கள் தெரியுமா? வெள்ளை ஈயம் என்று ஒரு பொடி இருக்கிறது. அத்துடன் ஆளிவிதை எண்ணெய்யைச் சேர்ந்து நன்றாக அரைப்பார்கள். எவ்வளவுகெவ்வளவு அதிசுமாக அரைக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமான இடத்துக்குப் பூச முடியும். அப்படி நன்றாக அரைத்த பின் அத்துடன் கற்பூரத் தைலத்தைக் கலந்து பூசுவார்கள். நாம் பூசும் சாயம் வெள்ளை ஈயம் தான்; வேறு நிறம் வேண்டுமானால் அதற்குரிய பொடியையும் சேர்த்துக் கொண்டு அரைக்க வேண்டும்.

கற்பூரத்தைலம் சீக்கிரமாக ஆவியாக மாறக்கூடிய தன்மை உடையதாகையால் சாயத்தைச் சீக்கிரமாக