பக்கம்:தந்தையும் மகளும்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

125

ஆயினும் இறந்த உடலைப் பாதுகாக்கும் முறை 1770-ம் ஆண்டில் ஜெர்மனியில் தொடங்கப் பெற்றதாக அறிகிறோம். ஜெர்மன் விஞ்ஞானி ஒருவர் மது சம்பந்தமான திராவகம் ஒன்றை சிவப்புரத்தக் குழாய்களுக்குள் செலுத்தியதாகவும், அதன் வாயிலாக இறந்த உடலின் உருவமும் நிறமும் சிறிது கூட மாறாமல் இருந்ததாகவும் தெரிகிறது. ஆயினும் அவ்வாறு பாதுகாக்கும் முறையின் இரகசியத்தை அவர் யாருக்கும் கற்றுக் கொடுக்காமல் போய்விட்டார். பின்னால் வில்லியம் ஹண்டர் என்பவர் சில வகை எண்ணெய்களைச் சிவப்பு இரத்தக் குழாய்களுக்குள் செலுத்தி இறந்த உடலைப் உடலைப் பாதுகாக்கும் முறையைக் கையாண்டு வந்தார். இக்காலத்தில் கையாளும் முறை முதலில் சிவப்பு இரத்தக் குழாய்களிலுள்ள இரத்தத்தை வெளியே எடுத்துவிட்டு மது சாரத்துடன் சில ரஸாயன உப்புக்களைக் கலந்த திரவத்தைச் செலுத்துவதாகும்.

அம்மா! ருஷ்ய நாட்டைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாய் அல்லவா? அந்த நாட்டின் குடியரசுத்vதலைவராயிருந்த லெனின் என்பவருடைய உடலை அழிந்து போகாமல் பாதுகாத்து வைத்திருக்கிறார்களாம். அதை ஆண்டுக்கு ஒரு முறை அந்நாட்டு மக்கள் போய் தரிசித்து வருகிறார்களாம்

125அப்பா! தண்ணீர்பட்டால் கறையுண்டாகவில்லை, மைபட்டால் கறை உண்டாகிறது, அதற்குக் காரணம் என்ன?

ஆம் அம்மா! நீ எழுதும் போது உன்னுடைய பாவாடையில் மைக் கறை உண்டாய்விடுகிறது, அது உனக்கு வருததமாயிருக்கிறது. அதனால் தான் இதைக் கேட்கிறாய்.

தண்ணீரில் கறை உண்டாக்கக் கூடிய பொருள் எதுவும் கிடையாது. அதில் ஏதாவது கரைந்திருந்தால் தானே