பக்கம்:தந்தையும் மகளும்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

135

உள்ள அமோனியா வாயுவை அமுக்கினால் அது அடுத்துள்ள வளைவுக் குழாயில் போய் திரவமாக மாறுகிறது. அப்பொழுது அமோனியா கக்கும் உஷ்ணத்தை அதன் மீது விழுந்து கொண்டிருக்கும் தண்ணீர் கிரகித்துக்

கொள்கிறது. இவ்விதம் குளிராய்விட்ட அமோனியா திரவம் மெதுவாக அடுத்துள்ள வளைவுக் குழாய்க்குள் செல்கிறது. அங்கே அதன் மீதுள்ள அழுத்தத்தைக் குறைத்து விடுவார்கள். அதனால் அமோனியா திரவம் மறுபடியும் வாயுவாக மாறிவிடுகிறது. அப்படி மாறும் பொழுது அந்தத் தொட்டியில் உப்பு ஜலத்தில் வைத்துள்ள பாட்டில்களிலுள்ள சுத்த ஜலத்திலுள்ள உஷ்ணத்தைக் கிரகித்து விடுகிறது. அதனால் அந்த சுத்த ஜலம் ஐஸாக உறைந்து விடுகிறது. தொட்டியிலுள்ள ஜலத்தில் உப்புக் கரைந்திருப்பதால் அந்த ஜலம் மாறாது. அமோனியா வாயு அங்கிருந்து இடது பக்கத்துக்குப் பாத்திரத்துக்குச் சென்று மறுபடியும் அமுக்கப்படும். இவ்விதமாக முதலில் எடுத்துக் கொண்ட அமோனியா வாயுவைக் கொண்டே இடை விடாமல் ஐஸ் செய்து வருகிறார்கள்.

136Aஅப்பா! நகராட்சியினர் அசுத்தமான இடங்களில் ஒரு வெள்ளைப் பொடியைக் கொண்டுவந்து தூவுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?