பக்கம்:தந்தையும் மகளும்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

தந்தையும்

ஆக்ஸிஜென் என்று ஆங்கிலத்தில் கூறும் அந்த வாயுவுக்குப் பிராண வாயு என்ற பெயர் வழங்கி வருகிறது.

ஆனால் நம்முடைய உடல் கோடிக் கணக்கான ஸெல்கள் என்னும் உயிரணுக்களால் ஆனது போலின்றி ஒரே ஒரு உயிரணுவால் ஆன பிராணிகளும் உள. அவை கண்ணுக்குப் புலப்படா. அவை ஆயிரம் சேர்ந்தால் தான் குண்டூசி முனை மாதிரி தெரியும். அவற்றைப் பாக்டீரியா என்று கூறுவார்கள்.

அவற்றுள் ஒரு வகைப்பிராணிக்கு உயிர் வாழ்வதற்குப் பிராண வாயு தேவை இல்லை. அம்மா! தேவையில்லை என்பது மட்டுமன்று, பிராண வாயு பட்டால் இறந்து போகவும் செய்யும். சில சமயங்களில் வெண்ணெய் கெட்டுப்போய் நாறும். அந்த நாற்றத்தை உண்டு பண்ணும் பாக்டீரியாதான் பிராண வாயு இல்லாமல் உயிருடன் இருக்கக் கூடிய பிராணியாகும்.

பாக்டீரியாக்கள் ஒரே நாளில் சுமார் கோடியாகப் பெருகக்கூடியனவா யிருப்பதாலும், இது பிராணவாயு இல்லாமல் ஜீவிக்கக்கூயதாக இருப்பதாலும் இந்த பாக்டீரியா புண்களில் சேர்ந்தால் மிகவும் அபாயகரமானதாகும்.

157அப்பா! உலகத்தில் முதன் முதல் உயிர் உண்டானது எப்படி?

அம்மா! நம்முடைய பூமி சூரியனிடமிருந்தே பிரிந்து வந்ததென்றும் அப்பொழுது நெருப்புப் பிழம்பாயிருந்து பின்னாலேயே குளிர்ந்து மண்ணும் நீரும் ஆயிற்று என்றும் கேட்டிருக்கிறாய். அப்படி மண்ணும் நீரும் மட்டுமிருந்த இடத்தில் உயிர் எப்படி வந்து சேர்ந்தது என்று கேட்கிறாயா?

ஆம், அம்மா! இப்பொழுது பார்த்தால் உயிரிலிருந்து தான் உயிர் உண்டாகிறது, உயிரில்லாததிலிருந்து உயிர்