பக்கம்:தந்தையும் மகளும்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

157

மாக ஆகிப் பல ஆண்டுகள் ஆனபின் அதை நீரில் போட்டால் அது நீரைக் குடித்துப் பருத்து அசைய ஆரம்பிக்கும். ஒரு மணி நேரத்தில் எப்போதும்போல் நகர்ந்து செல்லும்.

சில நத்தைகளும் இவ்விதம் உயிர் வாழ்வதுண்டு 1846ம் ஆண்டில் எகிப்து நாட்டிலிருந்து ஒரு மண்கட்டி கொண்டுவந்து லண்டன் பொருட்காட்சிச் சாலையில் வைத்திருந்தார்கள், அதில் ஒரு நத்தைக்கூடு ஒட்டிக் கொண்டிருந்தது. அந்த நத்தைக்கூடு நான்கு ஆண்டுகள் சென்த பின் அசைய ஆரம்பித்தது. அதனுள் உறங்கிக்கொண்டிருந்த நத்தை விழித்து எழுந்து வெளியே தலையை நீட்டிற்று. மண் கட்டியிலிருந்து பிரிந்து எடுத்து வைத்திருந்தபொழுது அது நீண்டநாள் உயிருடனிருந்ததாம்.

161அப்பா! எந்த மிருகமும் முட்டையிடாது என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

ஆம், அம்மா! அப்படித்தாள் தோன்றுகிறது. ஆதியில் எல்லா மிருகங்களும் முட்டையே இட்டு வந்ததாகவும் முட்டையிடுவதால் பலவிதமான இடையூறுகள் ஏற்படுவதினால் அவை முட்டையிடுவதை விட்டு விட்டு குட்டியோட ஆரம்பித்தன என்பதாகவும் அறிஞர்கள கூறுகிறார்கள்.


அப்படி மிருகங்கள் முட்டையிட்டு வந்ததற்கு அடையாளமாக இன்றைக்கும் முட்டையிடும் மிருகங்கள் இரண்டு ஆஸ்திரேலிய நாட்டில் காணப்படுகின்றன. அவற்றை ஆங்சிலத்தில் பிளாட்டிப்பஸ் என்றும் எக்கிட்னா என்றும் கூறுவார்கள்.

பிளாட்டிப்பஸ் என்னும் மிருகம் ஒரு சமயத்தில் இரண்டு முட்டைகள் இடும். அவற்றைப் பறவை போலவே அடைகாத்து குஞ்சு பொரிக்கச் செய்யும். அப்படி முட்டையிலிருந்து வெளி வரும் குட்டிகள் தாயிடம் பால் குடித்து வளரும்.

எக்கிட்னா என்னும் மிருகம் ஒரு முட்டைதான் இடும், அதை உடனே எடுத்துத் தன்னிடமுள்ள ஒரு பையில்