பக்கம்:தந்தையும் மகளும்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

183

மகரந்தத்தை உபயோகியாவிட்டாலும் உண்டாக்கிக் கொண்டு வருகிறது என்று தாவர நூல் புலவர்கள் கருதுகிறார்கள்.

202 அப்பா! காய்களைப் பாத்திரங்களில் மூடி வைத்தால் பழுத்துவிடுகின்றனவே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! பழுக்கக் கூடிய பருவத்திலுள்ள காய்கள் எப்படிப் பழுக்கின்றன என்று எண்ணுகிறாய். அவற்றில் எதிலீன் என்னும் ஒரு வகை வாயு உண்டாகிறது; அதுதான் காயிலுள்ள நுண்ணறைகளைக் கிழித்துப் பழுக்கும்படி செய்கிறது அந்த வாயு அதிகமாக உண்டாகுமானால் காய்கள் சீக்கிரமாகப் பழுத்துவிடும். உண்டாகும் வாயு சிறிதளவாக இருந்தாலும் வெளியே போகாமல் தடுக்கப்படுமானால் அது சீக்கிரமாக நுண்ணறைகளைக் கிழித்து பழுக்கச் செய்துவிடும். அவ்விதம் அந்த வாயுவை வெளியே போகாமல் தடுப்பதற்காகத்தான் காய்களைப் பாத்திரங்களில் போட்டு மூடி வைக்கிறார்கள். மேனாடுகளில் காய்களை ஒரு அறையில் அடுக்கி வைத்துக் கொண்டு அதனுள் இந்த வாயுவைச் சிறிது அனுப்புவார்கள். காய்கள் பழுத்துவிடும்.

203அப்பா! காய்கறிகளும் பழங்களும் நாளானால் சுவை குறைந்து விடுகின்றனவே, அதற்குக் காரணம் என்ன?

ஆம், அம்மா! புதிய காயகறிகளும் பழங்களும்தான் அதிகச் சுவையாயிருக்கும். செடிகளும் மரங்களும் காற்றிலுள்ள கரியமில வாயுவைக் கிரகித்து அதிலுள்ள கரியை எடுத்துக்கொண்டு பிராணவாயுவை வெளியே விட்டுவிடுகின்றன என்பதை நீ அறிவாய். காய்கறிகளையும் பழங்களையும் நாம் செடிகளிலிருந்து பறித்துவிட்டாலும் அவைகள் கரியமில வாயுவைக் கிரகிப்பதையும் பிராண வாயுவை விடுவதையும் உடனே நிறுத்திவிடுவதில்லை. இவ்விதம் சுவாசம் நடைபெறுவதால் அவற்றிலுள்ள இனிமையும் மணமும் குறைந்துவிடுகின்றன.