பக்கம்:தந்தையும் மகளும்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

29

அம்மா! மேகங்கள் காணப்படும் உயரத்தை வைத்து வான நிலை நிபுணர்கள் அவைகளைக் குவியல் மேகங்கள் தொடுவான மேகங்கள். சுருள் மேகங்கள் என்று மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள். அவற்றுள் குவியல் மேகங்கள் ஒரு மைல் தூரத்திலும், தொடுவான மேகங்கள் அரை மைல் தூரத்திலும், சுருள் மேகங்கள் ஐந்தாறு மைல் தூரத்திலும் இருக்கும்.

சாதாரணமாக மேகங்கள் நீர்த்துளிகளின் கூட்டங்களே என்பதை அறிவாய். ஆனால் சுருள் மேகங்கள் வெறும் நீர்த்துளிகளால் ஆனவை அல்ல. அவை அதிக உயரத்தில் இருப்பதால் அங்கேயுள்ள அதிகக் குளிரால் நீர்த்துளிகள் சிறுசிறு பனிக்கட்டிப் படிகங்களாக ஆகி விடுகின்றன. அதனால் அந்தச் சுருள் மேகங்கள் அத்தகைய பனிக்கட்டிப் படிகக் கூட்டங்களே யாகும். சந்திரனுடைய ஒளி அவற்றினூடே வரும்போது அழகான ஒளி வட்டங்கள் சந்திரனைச் சுற்றி இருப்பதாக நம்முடைய கண்ணுக்குப் புலனாகின்றன.

16அப்பா! சந்திரனில் மக்கள் வாழமுடியாது என்று கூறுகிறார்களே, நம்முடைய பூமியும் அதுபோலவே ஆகிவிடுமோ?

அம்மா! பூமியானது சூரியனிடமிருந்து பிரிந்த ஒரு கோளமே என்பதை நீ அறிவாய். அப்படி அது பிரிந்து வந்த சமயத்தில் உஷ்ணமயமான வாயுக்களாலான ஒரு உருண்டையாகவே இருந்தது. அதன் பின் அது நாளடைவில் குளிர்ந்து மண் குழம்பாக ஆயிற்று. அப்பொழுது சூரியனுடைய ஆகர்ஷண சக்தி அதிலிருந்து ஒரு துண்டைப் பெயர்த்துவிட்டது. அந்தத் துண்டுதான் நாளடைவில் குளிர்ந்து இப்பொழுது நமக்கு நிலாப் பொழிந்து கொண்டிருக்கும் சந்திரன் ஆகும்.

சந்திரன் மிகச் சிறியதாக இருந்தபடியால் உயிர்கள்வாழ முடியாத அளவு குளிர்ந்துவிட்டது. அத்துடன்