பக்கம்:தந்தையும் மகளும்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

35

அந்த மாதிரிச் சமயங்களில் அறையின் நடுவில் பாயின் மேலோ கம்பளியின் மேலோ நிற்பதுதான் மிகவும் நல்லது. அம்மா! நீ இதை எல்லாம் மறந்துவிடாதே

23அப்பா! மழையானது மலைகளில்தான் அதிகமாகப் பெய்யும் என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! மழை எப்படி உண்டாகிறது என்பது உனக்கு தெரியுமல்லவா? கடல்போன்ற பெரிய நீர் நிலைகளிலுள்ள நீர் சூரிய வெப்பத்தால் நீராவியாக மேலே செல்கின்றது. அங்கே குளிர்ந்த காற்று பட்டதும் நுண்ணிய நீர்த்துளிகளாக மாறுகிறது அந்த நீர்த்துளிக் கூட்டத்தையே மேகம் என்று கூறுகிறோம். அந்த மேகம் மீண்டும் குளிர்ச்சி அடையுமானால் பெரிய நீர்த்துளிகளாக மாறுகின்றன. பெரிய நீர்த்துளிகள் கனம் தாங்காமல் கீழே மழையாகப் பெய்கின்றன.

மலைகள் உயரமாய் இருப்பதால் குளிராக இருக்கின்றன. ஆதலால் மேகங்கள் மலைமீது செல்லும்பொழுது குளிர்ந்து மழையாகக் கொட்டுகின்றன ஆதனால்தான் ஆறுகள் எல்லாம் மலையிலேயே உற்பத்தியாகின்றன

24அப்பா! மழை பெய்யாத ஊர் உண்டா?

அம்மா ! பெரிய பாலைவனங்களைப்பற்றிப் படித்திருப்பாய். அங்கே மழை மிகவும் அபூர்வமாக பெய்யும். அதனாலேயே அவை பாலைவனங்களாக இருக்கின்றன. அவை பாலைவனங்கள இருப்பதால் அங்கே ஊர்கள் கிடையா.

ஆனால் தென் அமெரிக்காலிலுள்ள பெரு என்னும் நாட்டின் தலைநகரமாக இருப்பது லிமா என்பதாகும். அங்கே அடிக்கடி பூகம்பம் உண்டாவதுண்டு. அதற்காக அங்கே வீடுகளில் சுவரைப் பச்சைச் செங்கல்லைக்கொண்டு ஆறடி கனமுள்ளதாகக் கட்டுகிறார்கள். அப்படியானால்