பக்கம்:தந்தையும் மகளும்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

தந்தையும்

ஆனால் இப்பொழுது செய்யும் காரின் முன்புறம் உருண்டையாக இருப்பதால் காற்றின் தாக்குதல் அதிகமாயிருப்பதில்லை. அத்துடன் காரின் பின்புறம் உருண்டு கூர்மையாக நீண்டிருப்பதால் பிரிந்த காற்று காரின் பின்புறத்திலேயே சேர்ந்து விடுகிறது. அதனால் காரின் பின்புறம் வெற்றிடம் உண்டாகாமல் போகிறது. காற்றுக்குக் காரைத் தள்ள முடிவதில்லை. கார் வேகமாக ஓட முடிகிறது

அம்மா ! நீ மீனையும் பறவையையும் பார்த்திருக்கிறாய் அல்லவா? மீன் நீரைக் கிழித்துக் கொண்டும் பறவை காற்றைக் கிழித்துக் கொண்டும் செல்வதாலும் அவற்றின் உடல்களும் இவ்விதமாகவே அமைந்துள்ளன. காற்றில் பறந்து செல்லும் ஆகாய விமானங்களையும் இது போலத்தான் செய்கிறார்கள்.

83அப்பா! மோட்டார் கார் சக்கரத்திலுள்ள டயரில் காற்று அடைக்கிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! மோட்டார் கார் டயரிலும் காற்று அடைக்கிறார்கள், சைக்கிள் டயரிலும் காற்று அடைக்கிறார்கள். ஆதியில் சைக்கிள் உண்டான காலத்தில் காற்று அடையாத கட்டி ரப்பரால் செய்த டயர் தான் உபயோகித்தார்கள். அது பலமாகவும் இருக்கும், சீக்கிரம் தேய்ந்து விடாமல் நீண்டநாள் உழைக்கவும் செய்யும். ஆனால் அந்த டயர் போட்ட வண்டிகளில் போவோர்க்கு சௌகரியமாயிருப்பதில்லை. வில் இல்லாத கட்டை வண்டியில் போவது போலிருக்கும். அதனால்தான் டயரினுள் காற்றை அடைக்கிறார்கள். அப்படிச் செய்தால் டயரினுள் செலுத்தப்படும் காற்று அமுங்கியிருப்பதால் ரப்பர்மாதிரி இருந்து கொண்டு வண்டி மேடுபள்ளங்களில் போகும் பொழுது மெத்தை மாதிரி உதவுகிறது. போகிறவர்களுக்கு சௌகரியமாயிருக்கிறது.

அம்மா! டயரின் உள்ளே ஒரு ரப்பர் குழாய் இருக்கும். அதில்தான் காற்றை அடைப்பார்கள். வெளியே