பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/527

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

526

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



இழிவு நீக்கக் கிளர்ச்சிக்காகப் பெயர் கொடுத்த தொண்டர்களின் எண்ணிக்கை 24-10-69 அன்று 202 பேர். கர்ப்பக்கிரக நுழைக் கிளர்ச்சி, நவம்பரில், மனனார்குடி ராஜகோபாலசாமி கோயிலில் துவங்கும்; அலுவல்களைக் கவனிக்கக் குழுஒன்று நியமனம்; என்ற போர்ப் பிரகடனமும் அன்றே வெளியாயிற்று. 29-ந் தேதி திருச்சி சவுந்தரராஜன் நாடக மன்றத்தார் நடத்திய குமரிக்கோட்டம் நாடகத்திற்குப் பெரியார் தலைமை தாங்கினார்.

சென்னை "விடுதலை" அலுவலகத்தில், ‘விக்டோரியா 820’ என்ற புதிய அச்சு இயந்திரம் இறக்குமதி செய்யப்பட்டு, 4-11-69 அன்று. அதனை இயக்கி வைக்க, ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது; ஆசிரியர் வீரமணி, மேலாளர் சம்பந்தம், மற்றும் தோழர்களால். அமைச்சர் என்.வி. நடராசன் தலைமையில், முதல்வர் கலைஞர் இயந்திரத்தை ஓட்டினார். அமைச்சர் மாதவனும் கலந்து கொண்டார். பெரியார், அண்ணா படத்தைத் திறந்துவைத்தார். முன்னதாக அருமையான தேநீர் விருந்தொன்று நடைபெற்றது. விழா முடிந்து, அழைப்பாளரெல்லாரும் விடைபெற்றபோது, பெரியார் ஆச்சரியம் தாங்காமல், மணியம்மையாரை அழைத்து, 'தேநீர் விருந்து இவ்வளவு காஸ்ட்லி (Costly)யாக எப்படிச் செய்தார் வீரமணி?" என்று நயமாக விசாரித்தார். அம்மையார் சிரித்தார்கள், 'நேற்று இங்கு நமது வழக்கறிஞர் கஜபதியின் குழந்தைக்குப் பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடினார். அதில் மீதமான இனிப்பு, காரம் வகையராதான் இது' என்றார் அம்மையார். குருவுக்கேற்ற சீடர்கள் எப்படி?

9-ந் தேதி திருச்சியில், சந்தேகந் தீர்க்கும் முறையில், பெரியார் விளக்கமுரைத்தார். நாம் தி.மு.க. அரசை ஆதரித்தாலுங்கூட, திட்டப்படி, கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சி நடந்தே தீரும். மனிதன் சந்திரனுக்குச் சென்று வரும் விஞ்ஞான யுகத்தில்கூடச் சூத்திரன் என்ற இழிவை நாம் ஒழித்தாக வேண்டாமா? என்று கேட்டார் பெரியார்.

இந்திரா காந்தியைக் காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் 12-ந் தேதி நீக்கப்பட்டதாகச் செய்திகள் வந்தன. இந்திரா அரசு முற்போக்காகச் செயல்படும் வரையில் அதற்குத் தி.மு.க. ஆதரவு உண்டு என்பதாக முதல்வர் கலைஞர் கூறியது. இராஜாஜிக்குப் பதிலென்றாலும், தன்னிலை விளக்கமாகவும் அமைந்தது. கடவுள் அருகில் எல்லாரும் போகலாம். எல்லாரும் தொடலாம் என்பதுதான் என்னுடைய கருத்தும் ஆகும். ஆனாலும், பெரியாரின் கிளர்ச்சியைக் கைவிடுமாறு நான் கேட்டுக் கொள்வேன், என்பதாகவும் முதல்வர் கூறினார்.

கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சியில் ஈடுபடுவோர்மீது வழக்குகள் தொடரப்பட்டால், தோழர்களுக்காக வாதாடத் தயார் என்று கூறிய வழக்கறிஞர்களின் பட்டியல் “விடுதலை"யில் தினமும்