பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/537

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

536

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


எதிர்த்து, நாடாளுமன்ற உறுப்பினரான முரசொலி மாறனும், தபால்துறை ஊழியரான ஜி. லட்சுமணனும் ரிட்மனு தாக்கல் செய்தனர்.

16-2-70 மதுரையில் சுயமரியாதைக் குடும்பங்களின் விருந்து விழாவில் பெரியார் கலந்து கொண்டார். தமிழர் ஒரே இனம், நாம் ஒரே சாதி என்றார். டாக்டர் சந்திரசேகருக்களித்த பேட்டியில் பெரியார் பல நல்ல கருத்துகள் சொன்னார். இளமையில் பிரத்தியட்சமாகப் பல குழந்தை பெற்ற குடும்பத்தினர் பட்ட கஷ்டங்களைக் கண்டார். கடவுள் கொடுத்தது என்று நம்பியே துன்பங்களை மக்கள் அனுபவித்ததை உணர்ந்தார். அதனால் தான் 1920-ல் எழுதினார். கர்ப்ப ஆட்சி என்று. “மத்திய அரசு குடும்ப நலத்துறைப் பிரச்சாரத்துக்காகப் போடும் பணியாளர்கள் பகுத்தறிவுவாதிகளாக இருந்தால் நல்லது. பெண்களின் திருமண வயதை 20-ஆக உயர்த்தினால் இந்த பிராப்ளம் ஓரளவு சால்வ் , ஆகும். உத்தியோகங்களில் 50 சதவிதம் பெண்களுக்குத்தான் என்றாக்கினால், அவர்களுக்குத் தன்னம்பிக்கை உண்டாகும். அபார்ஷனை லீகலைஸ் செய்வது நல்லதுதான்.” என்றார் பெரியார்.

செட்டி நாட்டரசர் எம். ஏ. முத்தையாச் செட்டியாரின் மனைவியார் ராணிமெய்யம்மை ஆச்சி 1-3-70 காலை 9-30க்கு இறந்து போனார். பெரியாரும் மணியம்மையார், வீரமணியுடன் 2-ந் தேதி மாலை 5-30 மணிக்கு, அடையாறு அரண்மனை சென்று, துக்கம் விசாரித்து வந்தார். 9-ந் தேதி எஸ். இராமநாதன் ஸ்டான்லி மருத்துவமனையில் இயற்கை எய்தினார். 10-ந் தேதி “விடுதலை” அன்னார் மறைவுக்கு வருந்தி ஓர் துணைத் தலையங்கம் தீட்டியது. 14-ந் தேதி தமிழ்நாடு சட்டமன்றம், அந்த முன்னாள் அமைச்சரின் மறைவுக்காக ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்திற்று. 11-3-70 அன்று பெரியாரும் மணியம்மையாரும் சைதாப்பேட்டை சென்று, இராமநாதனுடைய துணைவியார் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் துக்கம் விசாரித்து வந்தனர்.

12-3-70 சட்டமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த முதல்வர், கர்ப்பக்கிரகம் வரை கோயிலுக்குள் எல்லா இனத்தவரும் செல்லலாம் என்பதுதான் இந்த அரசின் கொள்கை. ஆயினும், தகுதி அடிப்படையில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகி, அர்ச்சனை செய்யலாம் என்கிற அளவில் இப்போது சட்டத் திருத்தம் கொணரப்படும் என்றார். சேலம் உருக்காலை நிறுவ, மத்திய அரசு முடிவெடுத்து விட்டதாகவும், தமது முயற்சி வெற்றி பெற்று விட்டதாகவும் கலைஞர் கூறியிருந்தார். 14-ந் தேதி பண்ணுருட்டி நீதிமன்றத்தில், கிருபானந்தவாரியார் சாட்சியமளிக்கையில் நெய்வேளியில் தாம் யாரையும்