பக்கம்:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. வளர்ந்தார் பள்ளிப் படிப்பு-துள்ளித் திரியும் துடுக்கு - மாணவப் பருவத்தில் வாணிகம் புரிந்தார்-19 பிராயம் வரை-1879 முதல் 1898 முடிய. கோவை மாவட்டத்தின் பெருங்குடி மக்களாகிய கொங்கு வேளாளர் சமூகத்திடையே, செல்வாக்கும் நல்ல மரியாதையும் பெற்றுத் திகழ்ந்தார் வெங்கட்ட நாயக்கர். பல அறக்கட்டளைகள், கல்விச் சாலைகள், மருத்துவ நிலையங்கள் நிறுவினார். திரண்ட செல்வத்தில் புரண் டெழுந்த போதிலும், பக்தி மார்க்கத்தைப் பரப்புவதை மறப்பதில்லை. வீட்டில் எந்த நேரமும் புராண கதா காலட்சேபங்கள், பஜனைப் பாடல்கள், வைணவ சமயத் தத்துவ விசாரணைகள் இத்யாதி, இத்யாதி...... கிருஷ்ணசாமியும் இராமசாமியும் முறைப்படி பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். மூத்த பிள்ளை பெற்றோருக்கு அடங்கிய பிள்ளையாய், நல்ல வைணவ சிரோமணியாய், நெற்றியில் நாமம் துலங்கப், பயக்கியுடன் பள்ளி சென்று வந்தார். அங்கு கிடைத்க கல்வியின் எல்லை வரை சென்ற பின்பும், அத்துடன் விடாது, கனியே தமிழ், ஆங்கிலம், வட மொழி, பக்தி மார்க்க நூல்கள், சித்த மருத்துவ நூல்கள் யாவும் விரும்பிப் பயின்றார். ஈ. வெ. கிருஷ்ணசாமி வைத்திய வள்ளல்" என் னும் சிறப்புப்பட்டம் பெற்று, இலவசச் சித்த மருத்துவ மனை ஒன்றினைத் தமது நேரடிப் பார்வையில் ஈரோட்டில் நெடுங்கிாலம் நடத்தி வ்ந்தார். நெற்றி யில் திருமண் தீட்டியதால் ஏற்பட்ட தழும்பு இறுதி