பக்கம்:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 ந டக்க முனைவாரா ? தனியே சமைத்துத் தனியே பரிமாறி வேண்டுமளவு-வயிறு புடைக்க உண்ணுமளவு.அன்னாருக்குப் படைத்திட அவரை வீட்டுக்கு வெளிப்புறத்து முற்றத்திலோ தாழ்வாரத்திலோ அமர்த்திச் சாப்பிடச் செய்து விட்டுத், தாம் பிறகு நீராடிப், பூசை முடித்துத், தனியே சைவ உணவு சமைத்துத், தமக்கு எடுத்து வைத்துக்கொண்டு உண்ணப் போவார். அதுவரை வெளிப்புறத்திலேயே பதுங்கியிருந்து, தாம் மென்று துப்பிய எலும்புத் துண்டுகளை எடுத்துவந்து, அம்மையாருக்குத் தெரியாமல் அவரது தனிச் சமையலில் மறைத்து வைத்துவிட்டு, வெளியேறுவார் இராமசாமி, அவ்வளவுதான் ! இந்த எலும்பைக் கண்ட அம்மையார், அய்யோ அய்யோ எனக் கதறிப் பதறித் தமது விரதம், பதியின் சதியால் இந்தக் கதியானதே என மாமியாரிடம் வழக்குரைப்பார். தீர்ப்பு மகன் பக்கம் சாயும். மருமகள் விரதம் கைவிட ஆணை பிறக்கும். மகனுக்கு வெற்றி; இனித் தடையில்லாமல் மாமிச உணவு கிடைக்கும் ! நாகம்மையார் பழைமையில் ஊறிய பெண்தானே; மூட நம்பிக்கை, குருட்டு பக்தி இவற்றுக்கு ஆட்பட்டவர் தானே, தேர், திருவிழா, கோயில், உற்சவம் இவைகளைக் காண விருப்பம் கொண்டு கோயிலுக்குச் செல்வார். அவர் இன்னா ரென்றறியாத சில முரட்டு ஆட்களை இராமசாமி கூலிக்கு அமர்த்திக் கொண்டு, அம்மையாரைக் காட்டி "அவள் நமது ஊர்க்கோவிலின் புதிய தேவதாசிப் பெண்; அவளை எள்ளி நகையாடி, ஏளனம் எகடியம் செய்து வாருங்கள்!” என்று துாண்டிவிட்டுத் தாம் மறைந்திருப்பார். எய்து விடப்பட்ட அம்புகள் தம் பணியை இனிது முடிப்பர். ஏவியவரோ கள்ளத் தனமாய் நகைத்து நிற்பார். காலிகளின் கண் வீச்சுக் கணைகளைக் கண்டஞ்சும் நாகம்மையார், விரைந்து வீட்டுக்கு ஒடி, இனிக் கோயிலுக்கே செல்வதில்லை என, அங்கு நல்ல பிள்ளையாய் முன்னதாகச் சென்றிருக்கும் கணவரிடம் நடந்ததைக் கூறிச், சத்தியம் செய்வார். மனைவிக்குக் கணவன் தாலிகட்டுவது, அவளை என் றென்றும் தனக்கு அடிமையாக வைத்துக் கொள்வதற்காகத்