பக்கம்:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iv



திருவாரூரில் முரசொலித்து வந்த மு.கருணாநிதி அவர்களையும் ஈரோட்டுக்கு வரவழைத்துக் கொண்டோம். இவருக்குத் திருமணமாகியிருந்ததால் மாதச் சம்பளம் தருமாறு அய்யாவைக் கேட்டுக் கொண்டோம்.

அய்யாவின் "குடிஅரசு" இதழில் நான் ஆஸ்தான கவிஞர். 1945-ல் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனைப் பற்றி ஒரு கவிதை எழுதி, அவருக்கு நிதி வழங்கி உதவவேண்டும் என்று "குடி அரசு" இதழில் வெளியிட்டுள்ளேன். பல்வேறு பெயர்களில் நிறையக் கவிதைகள் எழுதி வந்தேன். ஈ.வெ.கி. சம்பத்தும் நானும் கருப்புச் சட்டைப் படையின் முதலாவது அமைப்பாளர்களாக அய்யாவால் நியமிக்கப்பட்டோம்.

1944-ல் திராவிட மாணவர் முதல் சுற்றுப்பயணத்தின் போது, பத்து வயதுச் சிறுவனாக இயக்கத்தில் நுழைந்த வீரமணி, இன்று திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர்! என்னைவிடப் பத்து வயது இளையவராயினும், வீரமணிக்கு இதனால் இயக்கத்தில் என் அளவு சீனியாரிட்டி உண்டு! இந்தச் சிறுவனை மேசைமீது தூக்கி நிறுத்தி முதன் முதலில் பேசக் கேட்டவர்களில் நானும் ஒருவன். முதல் திராவிட மாணவர் பயிற்சி முகாமில் கலந்து கொண்டேன். பின்னர் பயிற்சிப் பாசறை அமைப்பாளரானேன்.

அய்யாவின் அனுமதியோடு ஊருக்கு வந்து, திருத்துறைப்பூண்டியில், எம். கே. ஹாஜாபீர், வி. எஸ். பி. யாகூப், இராம. அரங்கண்ணல் (அப்போது என் தம்பியுடன் படித்து வந்தார்) ஆகியோர் ஒத்துழைப்பால் முதலாவது கருப்புச் சட்டை மாநாடும், மாணவர் மாநாடும் நடத்தினேன். எங்கு மாநாடு நடந்தாலும், என் பணியின் பங்கு, ஓரளவாவது அங்கு இருந்து வந்தது.

1946-ல் மத்திய அரசின் தபால் இலாக்காவில் அஞ்சற் பிரிப்பாளர் அலுவல் எனக்குக் கிடைத்தது. அய்யாவிடமும், அண்ணாவிடமும், கலைஞரிடமும் விடை பெற்று அரசு ஊழியரானேன். கலைஞரும் அய்யாவிடம் சொல்லிக் கொண்டு, கோவையில் திரைப்படத் துறையில் எழுத்துப் பணிபுரியச் சென்றார். தஞ்சையில் நான் சில காலம் பணி