பக்கம்:தந்தை பெரியார்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 சர், திவான்பகதூர், ராவ்பகதூர், ராவ்சாகிப், கான்பகதூர், கான்சாகிப் போன்றவைகளைக் கட்சியில் உள்ளோர் விட்டு விடவேண்டும். அதேபோலக் கவுரவ நீதிபதி,ஜில்லாபோர்டு, தாலுக்காபோர்டு நியமனங்கள், நாமினேஷன் மூலமாகப் பிரிட்டிஷ் அரசால் தரப்பட்ட எல்லாப் பதவிகளையும் விட்டொழிக்க வேண்டும் என்பது சரிகைக் குல்லாய்க் கட்சி என்ற அவப்பெயர் இத்தீர்மானம் நிறைவேறியதன் வாயி லாக ஒழிந்தது; 1944 ஆகஸ்ட் 27-ஆம் நாளோடு இங்கு ஒரு தீர்மானத்தின் மீது பேசினார் கடலூர் சிறுவன் வீரமணி. கடலூர் சி. எஸ். கிருஷ்ணசாமி அவர்களின் பிள்ளைகளை திராவிட இயக்கத்துக்காகவே அவர் பெற்று வளர்த்து ஆளாக்கிவிட்டவர். மூத்தவர் கி. கோவிந்தராசன் தி. மு.க. செயலாளர். அடுத்தவர் கி. தண்டபாணி தி.மு.க. சார்பில் நகர் மன்ற உறுப் பினர். மூன்றாவது பிள்ளை பால்யத்திலேயே படுசுட்டி யாக இருந்தது. - கடலூர் ஒ. டி.எனப்படும் பழைய பட்டினத்தில் சென்னையைச் சேர்ந்த ஏ. சுப்ரமணியம் பி.ஏ. அலுவல் பார்த்து வந்தார். பெரியாரிடத்தில் ஏகலைவ பக் கொண்ட அவர் தமது பெயரை ஆ. திராவிடமணி என மாற்றிக் கொண்டு, தமிழ் வெறியும் சுயமரியாதைக் கொள்கை வெறியும் கொண்டவரானார். அவரது அத்யந்த சீடர் 10 வயது கி. வீரமணி; இவர் 2-12-1933-ல் பிறந்தார். கடலூரில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முதன்மை மாணாக்கராக இருந்து முடித்தார். இடையில் சுயமரியாதை உணர்வினை மூச்சோடும் நீரோடும் உணவோடும் உயிர்த்தும் உண்டும் தன் உடலை ஊணை அறிவை வளர்த்து வந்தார். வாயாடித் தன்மை பகுத்தறிவு ஒளி வீச்சாக இருந்தது. 10 வயதில் சராசரி உயரத்தைவிடக் குள்ளமாதலால் மேஜைமீது தூக்கி நிறுத்திப் பேசச் சொல்லிவிட்டால் போதும். நிறுத்துவதுதான் கஷ்டம். இந்தப் பத்துவயதுச் சிறுவன் வீரமணி 1944 சேலம் மாநாட்டில் தீர்மானத்தை வழி மொழிந்து பேசியதன் மூலம் இயக்கத்தின் வரலாற்றில் இடம் பிடித்துக் கொண்டது. வரலாறு படிப்போராக இல்லாமல் திராவிட இயக்க வரலாறு படைப்போராக மாறியது. -