பக்கம்:தனித் தமிழ்க் கிளர்ச்சி.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்

21



இடமார்ந்த தமிழ்நாட்டில் இலங்கு தமிழாம்
தடமொழிபல் தமிழ்க்கதைநூல் தாங்கியுள தம்மானை
தடமொழிபல் தமிழ்க்கதைநூல் தாங்கியுள தாமாயின்
வடமொழியி னின்றுசில வந்ததேன் அம்மானை
வடவர்முன் திருவடியே வஞ்சித்தார் அம்மானை (18)

புதுமைமிகும் நயம்பலதாம் புலப்படுத்தித் தமிழ்மொழியில்
பொதுமறையாம் திருக்குறள்தான் பொருந்தியுளதம்மானை
பொதுமறையாம் திருக்குறள்தான் பொருந்தியுளதாமாகில்
மதிகெடுக்கும் வடவரது மனுநூலேன் அம்மானை
ஓரம்சொல் மனுநூலை ஒதுக்கவேண்டும் அம்மானை (19)

இசைத்தமிழ்

இசைப்பின் இறைவனையும் இன்புறுத்தும் இயல்புடைய
இறையிற் சிறந்தமொழி இன்தமிழே யம்மானை
இசையிற் சிறந்தமொழி இன்தமிழே யாமாகில்
இசையரங்கில் இறுதியிலே இசைப்பதேன் அம்மானை
இசைப்பதற்குக் காரணம்நம் ஏமாற்றம் அம்மானை (20)

காடுதனில் வாழ்விலங்கும் கல்லும் உருகுவண்ணம்
பாடுதற்குத் தமிழிசைகள் பலவுண்டால் அம்மானை
பாடுதற்குத் தமிழிசைகள் பலவுண்டாம் என்றிடினே
பீடுற்ற தமிழிசையின் பெயர்களெங்கே அம்மானை கள்வர் பெயர்மாற்றிக் களவுசெய்தார் அம்மானை (21)


18. ஆரியர்கள் தமிழில் உள்ள சில கதைகளைத் தம் ஆரியத்தில் மறைவாக மொழிபெயர்த்துக்கொண்டு, பின்னர் இது இங்கிருந்துதான் தமிழில் போயிற்று என்று கூறுகின்றனர்.

19. திருக்குறள் உலகப்பொதுநூல். மனுநூல் ஒருவர்க்கு ஒரு விதமாகவும் மற்றொருவர்க்கு மற்றொரு விதமாகவும் ஓரங்கூறும் வடநூல்.

20. இசையரங்கு - இசைக்கச்சேரி; இறுதி - கடைசி.

21. பல தமிழிசைகளின் பெயர்கள் பிறமொழியில் மாற்றி மறைக்கப்பட்டன.