பக்கம்:தனி வீடு.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுக அமுதம்

t

மியோ விளையாட்டாகிய நம்முடைய வாழ்க்கையில் மயல் அடைந்து உருகிப் பருகிப் பெருகும் கிலேயைப் போன பாட்டிலே பார்த்தோம். மணிவாசகப் பெருமான் உருகிப் பெருகும் இன்ப நிலையைச் சொன்னதையும் பார்த்தோம். உருகிப் பருகிப் பெருகும் இந்த மாயா விநோத மனே துக்கம் மாய வேண்டுமென்று முருகனிடத்தில் விண்ணப் பம் செய்து கொண்ட அருணகிரிநாதர் அடுத்த பாட்டிலே தம்முடைய உண்மை நிலையை வெளிப்படுத்திவிடுகிருர். மாயா விநோத மனே துக்கம் மாய்வதற்கு கின் அருளே எப்போது தருவாய்?' என்று கேட்ட கையோடு இந்தப் பாட்டைப் பாடுகிருர். மாதர் மயலில் உருகிப் பருகித் துக்கம் பெருகியதே என்று அங்கே சொன்னர். இங்கே அவர் பெற்ற ஆனந்த நிலையைச் சொல்லும்போது உருகிப் பெருகும் மற்ருெரு கிலேயைச் சொல்கிருர். இதுதான் அவருக்குரிய இயல்பான கிலே. புத்திக் கமலத்து உருகிப் பெருகிப் புவனம் எற்றும் பரமானந்த சாகரத்'தைப் பற்றி

இப்போது சொல்ல வருகிருர்.

இன்பமும் துன்பமும்

மினிதன் உலகத்தில் வாழும்போது இன்பத்தை வேண்டுகிருன்; துன்புத்தை வேண்டுவது இல்லை. ஆனல் எல்லோரும் இன்பம் அடைகிருர்களா என்று பார்த்தால் அதுதான் இல்லை. சின்னஞ்சிறு குழந்தை கண்ணுக்கு அழகாக இருக்கிறதென்று எண்ணிக் கண்ணுடியை எடுத்து விளையாடுகிறது. கையிலே கீறிக்கொண்டு இரத்தம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/53&oldid=575864" இலிருந்து மீள்விக்கப்பட்டது