பக்கம்:தனி வீடு.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(v)

யாவர்க்கும் பொதுவான முறையில் கடவுளின் அடியையே சொல்லியிருக்கிருர் என்றும், அவருக்கு உருவ வ்ழிபாடு உடம்பாட்ே என்றும் சொல்லியுள்ளேன். இறைவன் திருவடியிலே உள்ளத்தைச் செலுத்துவதால் பெரும்பயன் உண்டென்பதற்கு எடுத்துக் காட்டாகச் சகாதேவன் வரலாற்றைக் கூறினேன் பின்பு அருணகிரியார் நமக் காகத் தாம் குறைபாடுடையவரைப் போலச் சொல்லிக் கொள்வதையும் முருகனே வேண்டிக் கொள்வதையும் விளக்கினேன்.

அடுத்தது தொண்டர் பெருமை என்னும் சொற். பொழிவு. உலகில் செல்வத்துக்கு உள்ள மதிப்பையும், அச் செல்வம் அமைதி தர மாட்டாண்மயையும், விரைவில் அழி வதையும் எடுத்துரைத்து, இறைவன் அருட் செல்வம் ஒன்றே அமைதி தரும் என்பதையும் அதனைப் பெற்ற தொண்டர்கள் மிகப் பெரியவர்கள் என்பதையும் விளக்கி னேன். தொண்டர் பெருமையை ஒளவையார் திருபு பாடலைக் கொண்டும் பெரிய புராணத்தைக் கொண்டும் ஒருவாறு காட்டியிருக்கிறேன். தொண்டர் குழாத்தைச் சார்வதனால் குருவின் அருளும் இறைவன் திருவருளும் கிடைக்கும் என்ற கருத்தைப் பின்பு சொன்னேன். பதிவி, பணம் என்னும் இரண்டினிடமும் ஆசை கொண்டவர் களுக்கு இன்பம்) இல்லை. அவ்விரண்டின் வடிவாக விள்ங்கிய சூரனும் கிரெளஞ்சாசுரனும் ஞானவேலால் அழிந்தனர். முருகனுடைய தொண்டர்கள் பதவிக்கும் பன்னத்துக்கும் ஆசைப்படமாட்டார்கள். அவர்கள்ேச் சார்வ் தல்ை நமக்குத் தகுதி ஏறும், இக்கருத்துக்களையும் விளக்கிச் சொற்ப்ெர் ஆறின்வ் முடித்திருக்கிறேன்.

முருகன் திருவருளால் கந்தர் அலங்காரச் சொற்பொழி வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உடனுக் குடன் புத்தக உருவமாக்க இயலாவிட்டாலும் ரீ அன்ந்த னுடைய உதவியால் தடையின்றி இவ்வரிசை மலர்ந்து வருகிறது. எல்லாம் முருகன் கருணிை. . . . . . .

காந்தமலை' \ கி ■ 2.

· ,懿 爵 》 . வா. ஜகங்காதன. சென்ன்ை.28 J . : "ויינית

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/7&oldid=575818" இலிருந்து மீள்விக்கப்பட்டது