பக்கம்:தனி வீடு.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுக அமுதம் 73 இப்போதும் அப்போதும்

'இப்போது அறிகுறியாகக் காணும் ஒன்று அப் போது அநுபவப் பொருளாக நிற்கும். இப்போது சர்க்கரை என்று எழுதி வைக்கிற பெயர் அப்போது நாவினலே சுவைப்பதாய் இருக்கும். இப்போது பொம்மை யாகப் பார்க்கிற ஒன்று அப்போது உயிருள்ள உருவமாக இருக்கும். இப்போது வெறும் கட்டையாக இருக்கிறது அப்போது ஒளி வடிவமாகத் தோன்றும் என்று மேன் மேலும் வருணித்துக் கொண்டு போகலாம். எம்பெரு மானுடைய ஆறுமுகத் திருக்கோலம் நாம் வழிபடத் தொடங்கும்போது நம் கண் முன்னல் திருக்கோயிலில் வடிவமாக கிற்கிறது. செயல் இழந்த அநுபவ நிலையில் கிற்கும்போது வேறு ஒரு வகையில் அமுதமாக கிற்கிறது.

ஆதியிலே தோன்றிய ஆறுமுகம் அந்தத்திலும் தோற்றும். இதனே அருணகிரியார் திருப்புகழில்.

'ஆதியொடும் அந்தம் ஆகிய கலங்கள்

ஆறு முகம் என்று தெளியேனே' என்று சொல்லியிருக்கிருர்.

விளக்கும் சோதியும்

ஒரு சிறிய விளக்கை வீட்டில் வைத்திருக்கிருேம. அந்த விளக்கு ஒர் எல்லைக்குள் ஒளியைப் பரப்பிச் சில பொருள்களே விளக்குகிறது. சூரியன் தோன்றில்ை எல்லா வீடுகளும் நமக்குத் தெரிகின்றன. கண்ணுக்கு எட்டும் தூரம் வரைக்கும் நம்முடைய பார்வை விரிகிறது. அப் போதும் நமக்குப் பல பொருள்கள் தெரிவது இல்லை. சுவருக்கு அந்தப் பக்கம் உள்ள பொருள்கள் தெரிவது

இல்லை. அந்தப் பேரொளியினல் எல்லாவற்றையும் - தெரிந்துகொள்ளும் வாய்ப்பு இருந்தாலும், அடுத்து நின்ற சுவர்களும், மறைப்புகளும் அப்பாலுள்ளதை கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/83&oldid=575894" இலிருந்து மீள்விக்கப்பட்டது