பக்கம்:தனி வீடு.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 . தனி விடு யில் சொன்னுல்தான் விளங்கும் என்பதற்காக அப்படிச் சொல்கிருர்,

எம்பெருமானுடைய உருவத்தைக் கண்டு கண்டு. தியானம் பண்ணி அன்பினால் உருகி நின்ருல் சோதி மய மான திருவுருவக் காட்சி கிடைக்கும். கண்டமாய் இருக் கிற இந்த உருவமே எல்லே இல்லாத சோதிப் பிழம்பாகக் காண்பதற்கு மூலமாக இருக்கும். இத்தகைய அறு பவத்தை ராமகிருஷ்ணபரமஹம்சர் முதலியவர்கள் கண்டி ருக்கிருர்கள். அருணகிரிநாத சுவாமிகள் சொல்கிறது ஏதோ கற்பனை என்று கினைக்கக்கூடாது.

வளர்ச்சி முறை

செயல் மாண்டு அடங்குதலும் புத்திக் கமலத்தில் உருகிப் பெருகுவதும் சிறிது சிறிதாக நிகழ்கின்ற செயல் கள், செயல் முழுவதும் அடங்கின. பிறகு புத்திக்கமலத்தில் ஊற்று எடுக்கிறதென்று கொள்ளக்கூடாது. செயல் அடங்கிக்கொண்டு வரவர, புத்திக் கமலத்தில் இன்ப ஊற்று எழும் செயல்முற்றும் மாளும்போது பேரமுதக் காட்சி கிடைக்கிறது. செயல் சிறிது சிறிதாக அடங்கி வரும்போது இன்பம் சிறிது சிறிதாக ஏறிக்கொண்டு வரும். அப்போது முன்னலே எந்தப் பொருளில் இன்பம் இருக்கிறதென்றும், எந்த எந்த முயற்சி சிறப்பு உடைய தென்றும் கினைத்தோமோ அவற்றில் கண்ட சுவை, எல்லாம் மாறிவிடும். முன் நிலைக்கும் பின் கிலேக்கும். உள்ள வேறுபாடு நன்கு தெரியும். பிறர் நம்முடைய பக்குவத்தைப்பற்றிச்சொல்ல வேண்டுமென்பது இல்லை. நம்மிடத்தில் முன்னலே இருந்த அழுக்குச் சிறிது சிறிதாகக் குறைந்து வருவதும் மெல்ல மெல்ல வெள்ளம் ஏறுவதும் நமக்கே தெரியும். அறிவு இல்லாத காலத்தில் சின்னஞ்சிறு குழந்தையாக இருக்கம்போது மண்ணையும் மலத்தையும் அப்பிக் கொண்டிருக்கிருேம். எறிய வேண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/86&oldid=575897" இலிருந்து மீள்விக்கப்பட்டது