பக்கம்:தப்பிவிட்டார்கள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணாநிதி 13 அத்தானை தூக்கிக் கரை சேர்த்தாள். 'இதோ ஸ்டே ஷன்' என்று அவனை இறுகப்பிடித்துக் கொண்டாள். இந்தத் தழுவலில் அவன் விலாவின் வலி கூட இருந்த இடம் தெரியவில்லை. "தங்கம்" என்றான் இன்பம் பொங் கிடும் கீழ் ஸ்தாயியில். "ஐயோ" என்று அலறினாள் தங்கம். லாரியிலிருந்து போலீஸ்காரர்கள் வேகமாக இறங்கிக் கொண்டிருந்தார்கள். 'டார்ச் லைட்டுகள் பல திசைகளிலும் சென்றன. தங்கத்தின் நினைவு சுழன் றது. தலை கிறுகிறுத்தது.விட்டல் கையில் விலங்கு - பிறகு தூக்கு மேடையில் அவன் - தங்கம் விதவைக் கோலம். இந்தப் பயங்கரம் அவளை ஒரு உலுக்கு உலுக்கிற்று. 'அத்தான் அகப்பட்டுக் கொண்டோம்' என்று வீறிட்டாள். விட்டல் விழிகளை உருட்டிப் பார்த் தான். அவள் கன்னங்களும் நனைந்து விட்டன. தங்கம் தன் சையனைத்தையும் ஒருசேர உதட்டில் சேர்த்து விட்டலை முத்தமிட்டாள். முத்தம் முடிந்தது. போலீஸ் படை"விடாதே பிடி" என்று கத்திக்கொண்டு ஓடிவந்த தைக் கண்டார்கள்.விட்டலின் இடுப்பிலிருந்த கட்டாரி யைத் தங்கம் எடுத்துக் கொண்டாள். போலீஸாரிடமி ருந்து தப்புவதற்கு அவளுக்கு இப்போது வழிதெரிந்து விட்டது. தன் அன்பு அத்தானின் நெஞ்சில் ஓங்கி ஒரு குத்து...அவன் பிணமானான். அந்த ரத்தம் சொட் டும் கட்டாரி அவள் கழுத்துக் குழியிலும் பாய்ந்தது, போலீஸாரிடமிருந்து விட்டலைக் காப்பாற்றினாள். வேத னையிலிருந்து தன்னையும் காப்பாற்றிக் கொண்டாள். சமுதாயக் கொடுமையிலிருந்து இருவருமே தப்பிவிட்டார்கள்.