பக்கம்:தப்பிவிட்டார்கள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணாநிதி 17 அடிக்கடி பார்க்கும் வேலையில் ஈடுபட்டிருந்தாள். இதைக் குமரேசும் ஜாடையாகப் புரிந்துகொண்டான். வண்டி ஓடிக்கொண்டிருந்தது. சந்திரா தன் கணவ னோடு ஏதாவது பேசுவதும், குழந்தைக்கு விளையாட்டுக் காட்டுவதும் அதே நேரத்தில் எதிரேயுள்ளவனைக் காணுவதுமாயிருந்தாள். குமரேசுக்கு ஏதாவது சொல்லி விட வேண்டுமென்று மனங் குமுறியது. தன் மனைவி- தனக்கருகில் உட்கார்ந்துகொண்டே இன்னொருவனின் அழகை ரசிப்பதென்றால்.... இதை அவனால்நினைக்கவே முடியவில்லை. அழகுக்காகத்தான் சந்திராவை அவன் மணம் புரிந்தான். அவள் வீட்டுக்குவந்த பிறகு அறிவும் நிரம்பி யவள் என்பது கண்டு மகிழ்ச்சிகொண்டான். குதூகல மாக ஓடிக்கொண்டிருந்த அவர்களின் குடும்ப வாழ்க் கைக்கு அந்த ரயில் பிரயாணம் முட்டுக்கட்டையாகத் தான் வாய்த்தது. இவன் நெஞ்சிலே இந்தப் போராட் டம் -ஆனால் சந்திராவோ எதிர்ப் பலகையில் வீசும் கண் களை நிறுத்தியபாடில்லை. குமரேஸ் கொந்தளித்தான். முழுதுங் கவனித்து ஒரு முடிவு கட்டிவிட வேண்டு மென்ற தீர்மானம் - அவனை அமைதிப்படுத்தியது. குழந்தை நன்றாகத் தூங்கி விட்டது. வண்டியும் விழுப்புரத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அந்தப் பெட்டியில் இருந்தவர்கள் தூக்க மயக்கத்தில் தள் ளாடிக கொண்டிருந்தார்கள். மூர்த்திக்கு ரயிலில் கிடைத்த புதுப் பாட்டியின் வாயிலிருந்து 'புஸ் புஸ்' என்று மூச்சு வந்து கொண் டிருந்தது. 'சந்திரா, குழந்தையைக் கீழே போட்டுத் தூங்க வைப்பதற்காக முயன்றாள்! குமரேசின் தோளி லிருந்த துண்டை எடுத்துப் பலகைக்குக் கீழே விரித்து, தானும் கீழேயே படுத்துக்கொண்டாள். குழந்தையை யும் பக்கத்தில் படுக்க வைத்துக் கொண்டாள். அவள் 2 க்கீ Bb