பக்கம்:தப்பிவிட்டார்கள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 சபலம் படுக்கும்போதே - குமரேசைப் பார்த்து வழக்கமான புன்சிரிப்பைக் கொட்டிவிட்டுச் சாய்ந்தாள். ஆனால் குமரேஸ் பதிலுக்குச் சிரிக்கவில்லை. அவன் நெஞ்சு குமுறுவது அவளுக்கு எப்படித் தெரியும். எதிரே யிருந்தவனுக்கு இப்போது தலையைக் குனியவேண்டிய வேலை ஏற்பட்டது. கண்களை மூடிக்கொண்டு தூங்க முயலும் சந்திராவின் முகத்தில் அவன் எந்தத் தனியழ கைக் கண்டானோ, தெரியவில்லை. ஒரே ரசனைதான்... அவனுக்கு இருப்புக் கொடுக்கவில்லை. வயிறு காய்ந்து வாடுபவனுக்கு எதிரே வட்டில் நிறையப் பொங்கலை வைத்தால்? அந்த நிலைபெற்றான். அவன் உணர்வு, ஒரு நிலையில் இல்லை யென்பது அவன் அசைவுகளி லேயே யே பளிச் பளிச்சென மின்னிக் கொண்டிருந்தது. சந்திராவின் தனிப்பார்வை வேறு அவனைப் பம்பர மாக ஆட்டி வைத்திருந்தது. அவனுக்கு க்கு அன்று ஒரு நல்ல வாய்ப்புத்தான். எத்தனையோ பெட்டிகளைத் துருவிப்பார்த் துபோன்ற ஒரு நல்ல இடம்கிடைக் காமல் கடைசியில் டைசியில் - நட்சத்திரத்துக்குக் குறி வைத்த போது சந்திரனே விழுந்து விட்டதுபோல - கிடைத்த இடமல்லவா இந்த இடம்? தூங்கும் சந்திராவை இவன், ரசித்தான் - ரசித்தான் அப்படி ரசித்தான். இந்த ரசமான கட்டத்தில்தான், குமரேஸ் முக்கால் கண்ணை மூடிக்கொண்டு நடப்பவைகளை எதிர்பார்த்துக் கொண் டிருந்தான்.சந்திரா, எப்படியும் கையுங் களவுமாகப் பிடிபட்டுவிடுவாள் என்று துடித்துக்கொண்டிருந்தான். எதிரே இருந்தவன் குமரேசை அடிக்கடி பார்ப்பதும் தன் கால்களால் அவள் கையை மெதுவாகத் தீண்டு வதும் மீண்டும் சுற்று முற்றும் பார்த்துச் சும்மா யிருப் பதுமே வேலையாயிருந்தான். . வண்டி நெல்லிக்குப்பத்தைத் தாண்டிவிட்டது. சந்திரா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். அவள் பொற்கரம் குழந்தை மூர்த்திரை அணைத்தபடியிருந்தது. அந்தவாலிபன் ஏதோ ஒரு புது துணிவுடன் பெருமூச்சு