பக்கம்:தப்பிவிட்டார்கள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணாநிதி 19 விட்டான். குமரேசையும் கூர்ந்து நோக்கிக் கொண் டான். குமரேஸ் தன் துப்பறியும் வேலைக்குத் தயா ராக - தூக்கத்தால் துவண்டிருப்பவனைப் போல இருந் தான். வாலிபனின் கைகள் சந்திராவின் கன்னத்தை வருடின.சந்திரா விழித்துக் கொண்டாள். வாலிபன், நடுங்கியபடி கைகளை எடுத்துக்கொண்டான். சந்திரா விழித்த வேகத்தில் குழந்தையும் சிணுங்கியது. சந்திரா மேலே நிமிர்ந்து தன் கணவனைப் பார்த்தாள். அவன் தூங்கி வழிந்துகொண்டிருந்தான். அவளை ஒரு முடிவு கட்டுவதற்காக இமைகளின் இடுக்கில் ஒளிந்து கொண் டிருந்த அந்தப் பயங்கரவிழிகளை அவள் பார்க்கவில்லை. கணவனைப் பார்த்த கண்களோடு அந்த வாலிபனையும் பார்த்தாள். அவன் உமிழ்நீர்விழுங்கினான். சிணுங்கிடும் குழந்தைக்கு ஒரு முத்தம் முத்தம் கொடுத்துவிட்டு அதைத் தட்டிக்கொடுத்தபடி தூங்கிவிட்டாள். எத்தனையோ முறை, அழுதிடுங் குழந்தைக்கு அவள் முத்தமிட்டுப் பிறகு தூங்கவைப்பகை குமரேஸ் பார்த்திருந்தாலுங்கூட, இந்த முத்தம் அவனை நெருப் பில் தள்ளி எண்ணெயை ஊற்றுவதா யிருந்தது. சிறிது நேரம் கழிந்தது. வாலிபனின் கரங்கள் மீண்டும் சந்திராவின்கன்னத்தைத்தொட்டன.சந்திரா விழித்தாள். விழித்தவள் குழந்தையைத் தட்டியபடி மறுபடியும் கண்களை மூடிக்கொண்டாள். குமரேசால் அங்கு உட்கார முடியாத நிலைமை ஏற்பட்டுவிட்டது. எரிமலையகிவிட்டான். பூகம்பமானது அவன் உள்ளம். பயங்கரமான ஒருமுடிவுடன் எழுந்தான். குழந்தை யைக் கையில் தூக்கினான். குழந்தை அழுதது. சந்திரா விழித்துப் பார்த்து தன் கணவன் கையில் குழந்தை யைக் கண்டு-தூங்கத் துவக்கினாள். குழந்தையுடன் குமரேஸ் ஐந்தாறு பலகைகளைத் தாண்டி அப்பாற் போனான். வாலிபனுக்கு மகிழ்ச்சி பெருக்கெடுத்தது. .