பக்கம்:தப்பிவிட்டார்கள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணாநிதி 21 இந்தப் பயல்கள் ரயிலில் ஏறுவது" என்று ஒரு குரல் கிளம்பிற்று. தீடீரென ஏற்பட்ட அதிர்ச்சியில் குழந் தையைக்கூட மறந்திருந்த சந்திரா, "குழந்தை எங்கே அத்தான்?" என்று ஆவலோடு கேட்டாள். "பக்கத்தில்தான் இருக்கிறது. இங்கேயே இறங்கு" என்றான் குமரேஸ். அவன் முகம் கருத்துவிட்டது. ஏன்? என்றாள் அவள். என்று மூட்டை "இறங்கேன்- சொல்கிறேன் முடிச்சுகளைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டான் கும ரேஸ். அவளும் இறங்கினாள். இறங்கியவுடன் கேட்டாள், "எங்கே குழந்தை?" என்று. கண்ணீர் வழிந்தோட அவன் சொன்ன பதில்: இரண்டு மைல்களுக்கப்பால் இருக்கிறது' என்பது தான். "ஏ! அவசரக்கார குமரேசா!" 'சபலக்கார முட்டாளே!' என்ற ஒலி, நாலா புறமிருந்தும் அவள் காதில் சாட்டை ஒலியாய் ஒலித்தது. இந்தோ சிலோன் எக்ஸ்பிரஸ்' கடலூரிலிருந்து புறப்பட்டது.