பக்கம்:தப்பிவிட்டார்கள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 தப்பிவிட்டார்கள் காரனைப்பிடித்துக் கூட்டில் அடைப்பதற்காகப் போலீ சார் லாரிகளிலும், கார்களிலும், சைக்கிள்களிலும்,புயல் வேகத்தில் முயன்று கொண்டிருந்தார்கள். ராமதுரை என்றால்- என்ன காலையிலெழுந்து, 'கடவுளே' என்று கூப்பிட்டு, ஒருமுறை தலை விதியை நொந்து கொண்டு வயிற்றுப் பாட்டைப் பார்க்கும் ஒரு ஏழை மனிதரா? ஏழை கொல்லப்படுவது ஒரு எறும்பு நசுக்கப் படுவது போல. ராமதுரை போன்ற பணக்காரருக்குச் சாவு வரலாமா? வாழ வசதியும், வளமும், வற்றாத இன்பமும் அளித்திருக்கிற கடவுள், ஆயுளையும் ஆயிரமாக அதிகப் படுத்தக் கூடாதா என்ற கவலை அவர்களுக்கு வளர் பிறையாகுமே. 'ஐயோ பாவமே! ராமதுரைக்கு நாற்பது வயது கூட இருக்காதே -நல்லவராயிற்றே - நாடு புகழ் வள்ள லாயிற்றே - நாகேஸ்வரன் கோயில் நவராத்திரி அவர் உபயந்தானே - அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் ஆயிரங் கால்மண்டபம் கட்டியது அந்த புண்ணியவான்தானே. ஒரு தர்ம தாதாவைப் பாவிப் பயல் குத்திக் குவித்து விட்டானே. அப்படித்தான் என்ன, அவர் தொழிலாளர் கட்குத் துன்பம் அளித்தாரா? ஒரு ஸ்ட்ரைக் உண்டா, வருடைய மில்லில்? ஒரு தொழிலாளியை வேலையை விட்டு நீக்கினார் என்றுதான் இருக்குமா? ஒன்றுமே இல்லாமல், இவன் எழவுக்கு இரு நூறு ரூபாய் கடன் கொடுக்க மறுத்தார் என்பதற்காக இப்படி ஒரு மகா பாதகம் செய்வதா? பாவி அவன் நல்லாயிருப்பானா. 'அந்த குபேரனுடைய மனைவி மகாலட்சுமிமாதிரி -இரண்டு மழலைக் குழந்தைகள். அவர்களுடைய மனம் என்னபாடுபடும்? - ஏழேழு ஜன்மங்களுக்குத் தவமிருந் தாலும் கிடைக்க முடியாத கணவனைப் பிரிந்து அவள் எப்படித்தான் துடிக்கிறாளோ? அடப் பழிகாரா, பஞ் சமா பாதகா, உன்னை இப்படிக் குத்திக் கொன்றால்