பக்கம்:தப்பிவிட்டார்கள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணாநிதி ... 7 உன் மனைவிக்கு வயிறு எரியாதா?- உம் உன்னையும் கொல்லாமலா விடப் போகிறார்கள்? 'தூக்கிலே போடக்கூடாது அந்தச் சண்டாளனை - துண்டு துண்டாய் அவன் சதையைக்கிழித்துக்கிழித்துக் கொல்லவேண்டும்-' இப்படி ஊரில் பல ப பகுதிகளில் பேச்சுக்கள். கொலைக்குக் காரணம்? விட்டலுக்கு இரு நூறு ரூபாய் தரவில்லை. ஆகவே கொன்றான் என்பது தான். 0 0 0 க லீலாமில் - நகரத்தின் ஓர் அழகான பகுதியில் அமைக்கப்பட்ட பெரிய தொழிற்சாலை. அங்கே சுமார் மூவாயிரம் தொழிலாளர் வேலை செய்தனர். பஞ்சை நூலாக்குவதும் - நூலை, நூதன ஆடைகளாக்குவதும் அந்த மில்லின் வேலை. தொழிலாளர்கள் வசிப்பதற் கென்று நகரையடுத்துச் சிறிது தொலைவில் லீலாபுரம் என்ற ஓர் இடமுண்டு. அங்குதான் மூவாயிரம் தொழி லாளிகளும் வாழ்க்கைத் தோணியை நகர்த்திக்கொண் டிருந்தனர். அந்த மூவாயிரத்தில் ஒருவன் தான்விட்டல். அன்று மாலை ஐந்து மணிக்கு வழக்கம்போல் ஆலையின் சங்கு ஊதிற்று. அடைபட்டுக் கிடந்த பாட் டாளிக் கூட்டம் அணி அணியாக வெளியேறிப் பெரு மூச்சு விட்டபடி வீடுநோக்கிற்று அவர்களோடு வெளி யேறிய விட்டலும் மில்லுக்கு எதிரேயுள்ளமரத்தடியில் நின்றுகொண்டு பெண்கள் போகும் வழியைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். சுமார் ஆயிரம் பெண்களை வெளியே அனுப்பும் வாயில் அது. எல்லாப் பெண்களும் வெளியேறி விட்டனர். அவளை மட்டும் காணவில்லை. ஆம், அவன் மனைவியைத்தான்! அவன் கால்களும் ஓய்ந்துவிட்டன. முன்னே போய் விட்டாளோ என்று வேகமாக நடந்தான். வீட்டுக்கு ஓடினான். வீடு பூட்டியிருந்தது. மீண்டும் திரும்பினான். காலையில் மில்லுக்குப் போகும்போதே தலையை வலிக்