96 தமிழகக் கலைகள் தக்கவை. கண்ணேய நாயுடு நாடகக் குழுவினர் நடித்து வந்த கிருஷ்ணலீல, தசாவதாரம், ஆண்டாள் முதலிய நாடகங்கள் முப்பது ஆண்டுகளுக்குமுன் காட்டில் சிறந்து விளங்கின. - இந்நூற்ருண்டின் முற்பாதியில் சங்கர்தாசு சுவாமிகள் இணையற்ற நாடக ஆசிரியராக விளங்கினர். இவர்தம் மாணவர்கள் தமிழகம் முழுதும் பரவியுள்ளனர். அவர்கள் ஆங்காங்கு இருந்துகொண்டு தம்மால் இயலும் அளவு இக்கலையை வளர்த்து வருகின்றனர். தமிழ் வளர்ந்த மதுரையில் இவர்தம் மாணவர்கள் சங்கங்களை அமைத்து நாடகப் பயிற்சி அளித்து வருகின்றனர்; மதுரை, இராமநாதபுரம், திருச்சி மாவட்டங்களில் நாடகங்களை நடத்துகின்றனர். சங்கரதாசு சுவாமிகளின் மாணவர்களாகிய டி. கே. சண்முகம் சகோதரர்கள் இன்றைய நாடகத் துறையிலும் நடிப்புக்கலையிலும் சிறந்து விளங்குகின்றனர். அக்கலைக்கு ஏற்ற ஒழுக்கமும் அவர்கள்பால் அமைந்துள்ளமை குறிப்பிடத்தகும். அவர்கள் நடித்துவரும் நாடகங்களுள் ஒளவையார், மனிதன், இன்ஸ்பெக்டர், இராசராச சோழன் என்பன குறிக்கத் தக்கவை. இவற்றுள்ளும் இராசராச சோழன் இணையற்ற நாடகமாகும். காண்பவர் உள்ளங்களைக் கொள்ளே கொள்ளும் மிகச்சிறந்த நாடகம் என்று இதனேக் கூறலாம். சோழர் வரலாற்றை அடிப் படையாகக் கொண்டு வரையப் பெற்றுள்ள இந்நாடகம், மக்களுக்கு வரலாற்று உணர்ச்சியையும் பக்தியையும் ஒழுக்கத்தையும் ஒருங்கே ஊட்டவல்லது. நவாப் இராசமாணிக்கத்தின் குழுவினர் வள்ளி திருமணம், சம்பூர்ண ராமாயணம் முதலிய நாடகங்களை நடித்து வந்தனர். - . .. - - காலத்திற்கேற்ற சீர்திருத்தங்களைக் கொண்ட நாடகங்கள் பல இப்பொழுது பலரால் நடிக்கப்பட்டு
பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/111
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6d/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/page111-702px-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf.jpg)