பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டடக் கலை 19 முதலியன மகாராட்டிரர் காலத்துக் கட்டடக் கலையறிவை நமக்கு உணர்த்துகின்றன. அகன்றும் உயர்ந்தும் விளங்கும் திருமலை நாயக்கர் மகாலிலுள்ள தூண்களும் சுவர்களும் மேல்தள அமைப்பும் நாயக்கர்காலக் கட்டடத் திறனை நமக்கு கன்முறையில் தெரிவிக்கின்றன. சோழ பாண்டியர் அரண்மனைகளும் இருந்திருக்குமாயின், அவை நமக்கு உணர்த்தும் அரிய உண்மைகள் பலவாக இருக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/34&oldid=862978" இலிருந்து மீள்விக்கப்பட்டது