100
தமிழகக் குறுநில வேந்தர்
மேற் சொல்லாநின்ற நாளில் “............. திருக்கானப்பேர் நயினார்க்கு” என வருதலான் அறியலாகும். சுந்தரத் தோளுடையார் என்பது திருமாலிருஞ்சோலைமலையழகர் திருப்பெயர்களுள் ஒன்று. இவற்றாற் பாண்டியர், சோழர், ஆரியசேகரன், வாணாதிராயர் எனப்பட்ட பல பேரரசரும் இச்சேதுகாவலைப் பெரும்புண்ணியமாக மதித்துப் பெயர்பெற்றனரென்பது உணரலாகும். இவர்கள்காலங்களில், சேதுபதிகள் இவர்கள் கீழ்க் குறுநில மன்னராய் நிலவினராவரென்றுய்த்துணரலாகும்.
இனி மூவேந்தருட் செந்தமிழ்ச்சங்கஞ் சீர்பெற ஒம்பியகாரணத்தாற் றமிழுடையாரென்று நல்லிசைப் புலவராற் புகழப்பட்ட அறிவுடைப்பாண்டியாட்சி தொட்டே புண்ணியமுடைமையானன்றிச் செந்தமிழ்க் கல்வியானு மிச்சேது நாடு சிறந்ததென்பதற்குச் சான்றாகக் சில கூறுவேன்.
கொற்கையினும் மதுரையினும் வளர்ந்த நறுந்தமிழ் மணம் அவற்றுக்கு மிகவும் அணித்தாய இச்சேதுநாட்டு வீசாதென் றியார்தாஞ் சொல்லத்துணிவர். பொன்னாங் கால் அமுதகவிராயரும் ரகுநாதசேதுபதியைப் புகழுமிடத்து,
“பால்வாய்ப் பசுந்தமிழ் வீசிய வாசம் பரந்த வையைக்
கால்வாய்த்த வீரையர்கோன் ரகுநாதன்”
எனப் பாடுதல் காண்க .
பரமேதிகாச கூேத்ரமாகவும், சரணாகதிதர்மம் விளைந்த பெருநிலனாகவும், விளைந்த பெருநிலனாகவும், கருணாகரன் ஸர்வஜீவர்க்கும் அபயப்ரதானம் அருளிய திவ்யஸ்தலமாகவும், இச் சேதுநாட்டுக்கோர் திலகமாகவும் விளங்கும் திருப்புல்லாணி எனப் பெயர்பூண்ட தர்ப்பசயனத்தில் திருக்கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் ஸர்வேச்வரன் ஞானஸ் வரூபியாதலை உலகெலா மறிந் துய்யவேண்டி ஆழ்வார்