பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. இராகவய்யங்கார்

125

 என இவர்கள். இச்சேது வேந்தர்களெல்லாம், தெய்வ வழிபாட்டானும், தருமசிந்தனையானும், செந்தமிழபி மானத்தானும், பெருங் கொடையானும் அளவிலாத புகழையே விளைத்தவர்கள். - இச்சேது நாட்டுத் தேவஸ்தானங்களும் அன்ன சத்திரங்களும் வருடமொன்றுக்கு நான்கிலக்க ரூபாவுக்கு மேற்பட்ட பொருள்வருவாயுடையனவாகும். புண்ண்னியி சேதுவைக் கண்ணிய பெருவழிகளெல்லாம் இவர்களது ஆன்னசத்திரங்களே நிறைந்து விளங்குவன காணலாம். நீர்வளமிகுந்த நல்லூர்கள் பல, அந்தணர்க்குத் தருமாசனம் என்னும் பெயரான் முற்றுாட்டாக இவர்களாலளிக்கப் பட்டுள்ளன; இவ்வாறே இவ்வேந்தர்க்ள் தேவாலயங்கட்கும் அன்னசத்திரங்கட்கும் மடாலயங்கட்கும் செந் தமிழ்ப் புலவர்கட்கும் முற்றுாட்டாக அளித்த கிராமங்களை எண்ணின் மிகப் பலவாம்.

வருடமொன்றுக்கு முப்பதினாயிர ரூபாவுக்கு மேற்பட்ட பொருள் வருவாய் இச்சமஸ்தானபதிகள் பரோபகாரத்துக் கென்று வரைந்துவைத்த பெருந்தனமாகும். இது. 'தருமமகமை” 'சாரிமகமை” என்னும் பெயர்களான் இன்றைக்கும் விளங்குகின்றது. இராமேச்சரம் இவ் வேந்தர்களாற் பெரிதுஞ் சிறப்பித்துப் போற்றப்பட்ட முக்கிய தேவாலயமாகும். இவர்கள் ஆண்டுப்புரிந்த தருமங்களே மிகவும் விலையுயர்ந்தன, அத்திருக்கோயிற்கண் இவ்வரசரியற்றிய அரிய பெரிய மண்டபங்க்ளின் விசித்திர சிற்பங்கள் மேற்றிசையோராலின்றைக்கும் பாராட்டப் பெறுவன. சிதம்பரம், மதுரை, திருப்பரங்குன்றம், திருப் பெருந்துறை, திருச்செந்துார், பழனி முதலிய கோயில்களெல்லாம் இவர்களது கட்டளைகள் உடையன.

சேதுதீரத்துள்ள இராமேச்சரம், திருப்புல்லாணி முதலிய சிவாலய விஷ்னு ஆலயங்களின் பெரிய திருப்பணிகளெல்லாம் இவர்களாலே நன்கியற்றப்பட்டன வாகும். இதனைத்,

தேனார் மொழிமடமாதர்சந் தானம்பொன் சேருங்கல்வி
மேனாட் டவமுனைப் போற்செய் தவர்க்குண்டு
வீணர்க்குண்டோ
வானா டரும்பணி ராமே சருக்குமுன் மண்டபஞ்செய்"
தானாம் விசய ரகுநாத சேது தளசிங்கமே!.