இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
70
தமிழகக் குறுநில வேந்தர்
3. பல்லவர்
பல்லவர்க்குரிய தொண்டை நாடு சளுக்கிய வேந்தராற் கொள்ளப்பட்டதென்றும் அவரை வென்று சோழர் வேங்கட மலையை யுடையராயினர் என்றும் கொள்ளற் கேற்ற பழம் பாடல் உண்டு. தொண்டையர் வேங்கடம் ஆண்டபோது செந்தமிழ் நாடாண்ட பாண்டியற்கு முதலில் அடங்கியிருந்தனர் என்பது
“வடவயின் வேங்கடந் தந்த
(அகம் 27)
என வந்துழிப் பழைய உரைகாரர் வேங்கடம் ஆளும் அரசர் திறையாகப் பாண்டியற்குத் தந்த யானை எனக் கொள்ளுதலான் அறியலாம்.
இப்பல்லவரை வென்று சளுக்கியர் வேங்கடமுடைய வராதலும் அவரை வென்று வளவர் கச்சியையும் வேங்கடத்தையும் உடையராதலும்,
“பலியுருவிற் கேலாத படைமழுவாள் வலனேந்தி’’
(தொல். சொல். 146 பேராசிரியருரை)
என்னும் பாட்டில்
“விழிவலத்தா னுருவழிந்தோன் வேடங்கண் டுனர்வழியாக்
கலிகெழு கடற்கச்சிக் கமழிளந்தே மாவி
னொலிதளிரு முலைச்சுவட் டுடன்பிறப்ப வுலவுங்கால்” எனவும்
“எல்வளை மகளி ரிடுபல நசைஇ,