பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குலமும் கோவும்

161


71. The Leyden grant.

72. மும்மடிச் சோழன் என்றும் சாசனங்களில் வழங்கக் காணலாம். மும்மடி என்பதற்கு மற்றையோரினும் மும்மடங்கு வலிமையுற்றவன் என்று பொருள் காண்பர் சிலர். -முதல் இராசராச சோழன் (உலகநாத பிள்ளை) ப. 41.

73. உய்யக் கொண்டார் என்ற தொடர் திருநாவுக்கரசரது வாக்கிலே பிறந்ததாகும். “மாதுயரம் தீர்த்தென்னை உய்யக்கொண்டார். மழபாடி மேய மழுவாளனார்” என்று ஈசனைப் போற்றினார் திருநாவுக்கரசர்.

74. 255 of 1914.

75. தஞ்சை நாட்டு மாயவர வட்டத்தில் அருமொழித் தேவன் என்ற பெயருடைய இரண்டு ஊர்களும், நாகப்பட்டின வட்டத்தில் ஓர் அருமொழித் தேவனும் உள்ளன. தென் ஆர்க்காட்டுச் சிதம்பர வட்டத்திலும் அருமொழித் தேவன் என்னும் ஊர் உண்டு.

76. 216 of 1908.

77. அங்கு இராஜேந்திர சோழன் பெயரால் மதுராந்தகன் என்பான் கட்டிய சிவாலயம் இராஜேந்திர சோழேச்சரம் என்று பெயர் பெற்றது. (31 of 1896) சுந்தர பாண்டியன் அக்கோயிலுக்கு நிவந்தம் அளித்தான்.

78. I. M. P., p. 480.

79. அங்குச் சுந்தர சோழன் திருமகளாகிய குந்தவைப் பிராட்டியார் இரவிகுல மாணிக்க ஈச்சரம் என்ற சிவாலயமும், குந்தவை விண்னகர் என்ற திருமால் கோவிலும், குந்தவை ஜினாலயம் என்னும் ஜைனக் கோயிலும் கட்டினாள். (8 of 1919). இரவிகுல மாணிக்கம் என்பது இராஜராஜனது விருதுப் பெயர்.

80. M. E. R.