பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும்

167


திருவானைக்கா

திரு ஆனைக்கா என்று அத்தலத்திற்குப் பெயர் வந்த தென்பர்.அக்காவிலுள்ள திருக்கோவில் ஜம்புகேச்சுரம் எனப்படும்.

திருக்கோலக்கா

சீகாழிக்கு அருகே திருக்கோலக்கா என்னும் சோலைப்பதி உள்ளது.அப்பதியில் இளங்கையால் தாள மிட்டு இனிய தமிழ்ப்பாட்டிசைத்தார் திருஞானசம்பந்தர்.இப்பாடலுக்கு இரங்கிய ஈசன் பிள்ளைப் பெருமானுக்குப் பொற்றாளம் பரிசாக அளித்தார் என்றும்,அன்று முதல் கோலக்காவில் உள்ள கோயில் திருத்தாள முடையார் கோயில் எனப் பெயர் பெற்ற தென்றும் கூறுவர்.10

ஏனையாக்கள்

இன்னும்,ஒரு நெல்லி வனத்தில் ஈசன் காட்சி யளித்தமையால் திரு நெல்லிக்கா என்னும் பெயர் அதற்கமைந்தது.திருவிடை மருதூரின் அருகேயுள்ள திருக்கோடிகா என்பது மற்றொரு சோலைக் கோவில்.11 வைத்தீஸ்வரன் கோவிலுக்கு ஐந்து மைல் துரத்திலுள்ள குரங்குக்கா என்பது மந்திச்சோலை.பாலைவனத்திலும் கொற்றவை என்னும் வீரத் தெய்வத்தைச் சோலையில் வைத்து மறவர்கள் வழிபட்ட முறை பழைய நூல்களிற் குறிக்கப்படுகின்றது.12

காடுகள்

ஈசன் உறையும் காடுகளும் தேவாரப் பாடல்களால் இனிது விளங்கும். திருமறைக்காடு முதலிய காட்டுத் திருப்பதிகளை பாசுரத்திலே தொகுத்துப் பாடினார் திருநாவுக்கரசர்.13 திருமறைக்காடு