பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும்

173


“வெண்ணாவல் அமர்துறை வேதியனை"-திருஞான சம்பந்தர், திருவானைக்காப் பதிகம், 11.

“ஜம்புகேசுரம் என்ற வடசொல்லுக்கு, நாவற் கோயில் என்று பொருள்.

4.ஆமிரம் என்ற வடசொல் மாமரத்தைக் குறிக்கும். ஏக ஆமிரம் என்பது ஏகாமிரமாகி, பின்னர் ஏகாம்பரம் எனத் திரிந்ததென்பர். கச்சி ஏகம்பம் என்று தேவாரத்திற் பாடப்பெற்ற திருக்கோயிலில் பழமையான மாமரமொன்று இன்றும் காணப் படும்.கம்பை யென்னும் வேகவதி யாற்றை யடுத்துள்ளமையால் ஏகம்பம் என்ற பெயர் அமைந்த தென்பாரும் உளர். See "South Indian Shrines” - P. V. Jagadisa Ayyar, p. 86.

“கம்பக்கரை ஏகம்பம் உடையானை” என்னும் திருஞான சம்பந்தர் வாக்கு இதற்கு ஆதாரமாகக் கொள்ளப்படுகின்றது. -திருக்கச்சி யேகம்பத் திருப்பதிகம். 5.

5. திருப்பருத்திக் குன்றத்தில் குரா மரத்தடியில் அமர்ந்து ஞானம் பெற்றார் சமண அடிகளாகிய வாமன முனிவர்.

6.

“பூந்தண்நறு வேங்கைக் கொத்திறுத்து
மத்தகத்திற் பொலிய ஏந்திக்
கூந்தற் பிடியும் களிறும்
உடன்வணங்கும் குறும்பலாவே"

-

திருஞான சம்பந்தர், குறும்பலாப் பதிகம், 8.

7.“கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில்” -திருநாவுக்கரசர் அடைவு திருத்தாண்டகம், 5.

8.“கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற்கோயில்” -திருநாவுக்கரசர் அடைவு திருத்தாண்டகம், 5.

9.சேக்கிழார், கோச்செங்கட் சோழர் புராணம்,2,3.