பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

ஊரும் பேரும்


பரங் குன்றத்து மேவிய பரமனைத் தமிழ்நாட்டு மூவேந்தருடன் சென்று வழிபட்டுத் திருப்புகழ் பாடினார் சுந்தரர். “முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே மொழிந்த பாடல்” என்று அவர் தாமே கூறுதலால் இவ்வுண்மை அறியப்படும். பரம் பொருளாகிய ஈசன் கோயில் கொண்டமையால் அது பரங்குன்றென்னும் பெயர் பெற்றதென்றும் தோன்றுகின்றது.

பருப்பதம்

இந்நாளில் ஆந்திர தேசத்துக் கர்னூல் நாட்டில் சிறந்து விளங்கும் ரீசைலம் என்னும் பதியே பருப்பதம் ஆகும்.கல்லார்ந்த வழி நடந்து, அரிதிற் காண்டற்குரியது அப்பதி. “செல்லல் உற அரிய சிவன் சீயர்ப்பத மலை” என்று சுந்தரர் பாடியதன் கருத்து இதுவே போலும் கிருஷ்ண நதிக் கரையிலுள்ள குன்றுகளிடையே நிவந்தோங்கி நிற்கும் பருப்பதத்தின் நடுநாயகமாக மல்லி கார்ச்சுனம் என்னும் திருக்கோயில் விளங்கு வதாகும்.அதைச் சார்ந்த அளகேச்சுரம் முதலான பல ஆலயங்களும் மண்டபங்களும் ஆற்றின் இருமருங்கும் உள்ளன.

செங்குன்றம்

கொங்கு நாட்டுத் திரு மலைகளுள் ஒன்று திருச் செங்குன்றம்.அம்மலையைச் சார்ந்த தலத்தைக் கொடி மாடச் செங்குன்றுர் என்று தேவாரம் செங்குன்றம் போற்றுகின்றது.செந்நிறமுடையதா யிருத்தலால் செங்குன்றம் என்னும் பெயர் அதற்கு வந்தது போலும் இந் நாளில் சேலம் நாட்டில்