பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210 ஊரும் பேரும்


9. 32 of 1913.

10. மயிலாடுதுறை. மயூரபுரமாகி, மயூரவரமாகி, மாயவரமாகிய செய்தி பின்னர்க் கூறப்படும்.

11. காடவர்கோன் திருவெண்பாவில், “கழுகு கழித்துண்டலை யாமுன் காவிரியின் தென்பால் குழித்தண்டலை யானைக் கூறு" என்று கடம்பந்துறையைப் பாடியுள்ளார்.

12. இத் தலத்தைக் குறித்துக் 'கடம்பூர் கோயில் உலா’ என்னும் பிரபந்தம் ஒன்று உண்டு.

13. M. E. R., 1925.

14. இது திருச்சி நாட்டுப் பெரம்பலூர் (பெரும்புலியூர்) வட்டத்தில் உள்ளது.

15. 316 of 1903 ஈசான மங்கலத்துத் திருச்செந்துறையில் முதற் பராந்தக சோழன் மகனாகிய அரிகுல கேசரியின் மனையாள், தென்னவன் இளங்கோ வேளாரின் திருமகள் எடுப்பித்த கற்றளியைக் குறிப்பது இச் சாசனம். S. I. I. Vol III, ஐ. 228.

16. 568 of 1908; 575 of 1908.

17. தஞ்சை நாட்டுத் திருத்துறைப்பூண்டியும் கோயிலடியாகப் பிறந்த ஊர்ப்பெயராகத் தெரிகின்றது. திருத்துறையென்ற ஆலயத்தையுடைய பூண்டி திருத்துறைப்பூண்டியாயிற்று போலும்; 477 of 1912 இவ்வாறன்றித் திருத்தருப்பூண்டி யென்னும் பெயரே திருத்துறைப்பூண்டியெனத் திரிந்தது என்று கொள்வாரும் உளா்.

18. 210 of 1929.

19. திருஞான சம்பந்தர் புராணம், 342

20. I. M. P., Trichinopoly,371,374.