பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும்

241

தெய்வ நலம் பெற்ற ஊரென்று தோன்றுகின்றது. திருக்குணவாயில் என்பது ஒர் ஊர் என்றும், அது வஞ்சியின் கீழ்த்திசைக்கண் உள்ள தென்றும், உரை ஆசிரியராகிய அடியார்க்கு நல்லார் கூறுகின்றார்.

திருவிடை வாயில்

இன்னும், சில வாயிற்பதிகளின் பெருமை சாசனங்களால் விளங்கும். நன்னில வட்டத்தில் உள்ள திருவிடை வாய்க்குடி நெடுங்காலமாக வைப்புத் தலங்களுள் ஒன்றாக வைத்தெண்ணப் பட்டது.அத்தலத்தைப் பற்றிய குறிப்பு, திருத் தொண்டர் புராணத்திலும் காணப்படவில்லை. எனினும்,திருவிடைவாய் என்னும் திரு விடை வாயில் திருஞான சம்பந்தால் பாடப் பற்றதென்பது கல்வெட்டால் விளங்கிற்று.25 தஞ்சை நாட்டு நன்னில வட்டத்தில் இப்போது திருவிடை வாசல் என வழங்கும் ஊரே இத்தலம் என்பது தெளிவாயிற்று. “மறியார் கரத்தெந்தை” என்றெடுத்து, “மாறில் பெருஞ் செல்வம் மலி விடைவாயை, நாறும் பொழில் காழியர் ஞான சம்பந்தன் கூறும் தமிழ் வல்லவர் குற்றமற்றோரே" என்று அழகுற முடித்த திருப்பதிகம் வடிவாகக் கல்வெட்டிலே காணப்படுகின்றது.26

திருவேங்கை வாயில்

திருவேங்கை வாசல் என்னும் ஊர் புதுக்கோட்டை நாட்டில் உள்ளது. திரு மேற்றளி என்பது அங்குள்ள கோயிலின் பெயராகும்.பெருநாட்டுத் தேவதான மாகிய வாயில் திருவேங்கை வாயிலிற் கோயில் கொண்ட திருமேற்றளி மகாதேவர்